ஒருவர் பின் ஒருவராக
ரயில் விளையாட்டில்
அடுத்த ஆண்டு வெளிவரப்போகும் என்னுடைய புதிய நூலின் தலைப்பை சரியாக கணிப்பவர்களுக்கு என்னுடைய நூலை பரிசாக அனுப்பி வைக்கிறேன்.
நிபந்தனைகள்/குறிப்புகள் :
வேறொரு மாநிலம்
வேறொரு ஊர்
வேறொரு ரயில்
வேறொரு யானை.
அதே மாநிலம்
வேறொரு ஊர்
வேறொரு ரயில்
வேறொரு யானை.
அதே மாநிலம்
அதே ஊர்
வேறொரு ரயில்
வேறொரு யானை.
அதே மாநிலம்
அதே ஊர்
அதே ரயில்
வேறொரு யானை.
*யானைகள் மீண்டும் மீண்டும் ரயில் மோதி கொல்லப்படுகின்றன.சென்ற மாதம் தமிழ்நாட்டில். நேற்று ஒடிசாவில்.
I visited Kuthiraiyar, a place in the foothills of the Palani hills, during the last week of 2019. It was a memorable visit as it happened before the covid pandemic. I went to the nursery of the Palni Hills Conservation Council centre and had a conversation with Mr.Krishnamurthy who looks after the place. He took me to the area where saplings had been planted the previous year, near the water catchment of the Kuthiraiyar dam. I learned about different indigenous plants such as the Golden Shower [Cassia fistula], Neem [Azadirachta indica], Camel Foot [Bauhinia variegata], Siris (Albizia lebbeck], North Indian Rosewood [Dalbergia sissoo], Indian Beech [Millettia pinnata] and many others.
This area was the natural habitat for the Small Clawed Otter [Aonyx cinereus]. A researcher, Ms Meena, had conducted a detailed study of Small-clawed Otters during 1999-2000. According to her , the river ecosystem is affected due to the discharge of pesticides and industrial effluents. As the otters prey base depends on the river ecosystem, their population is affected, leading to a decline in their numbers. However, the major reason for the population decline in otters in the Palani hills is due to poaching. Otters were poached for their skin (used for drums), for their meat and their fat used in medicine.
I went for a bird walk in the area surrounding the dam at about 7.30 a.m. No movement or bird song was evident until about 8.30 a.m when the resident birds, such as the Southern Coucal, the Common Myna, the Green Bee Eater, the Indian Golden Oriole, the Grey Jungle Fowl, the Laughing Dove, the Rose Ringed Parakeet, the Common Iora, the Common Tailorbird, the Rufous Treepie, the Red rumped Swallow, the Red-vented Bulbul, the White-browed Bulbul, the Yellow-billed Babler, etc., made their appearance. When the forest canopy received more sunshine at around 9.00 a.m., the flycatchers appeared. The Indian Paradise Flycatcher , a male, was perched on a tree. Other flycatchers then turned up. The Tickell's Blue flycatcher, the Brown Breasted flycatcher, the Blue-throated Blue flycatcher, Asian Brown flycatcher and the Taiga flycatcher were at the same spot.
This was the first time that the Taiga Flycatcher was recorded in the Palani hills. These birds migrate from East Asia to South India during the winter. I kept moving gingerly into the jungle and started observing the Tickell's blue flycatcher which was on call. The song of the flycatcher crescendos were there. Then I started walking towards the water catchment, to the open area where the waders were. The red wattle lapwing communicated my presence to their counterparts I observed four different species of Wagtails within an hour: the White-browed Wagtail, the Yellow Wagtail, the Grey Wagtail and the Forest Wagtail. Except for the first, the others are migratory. Though the Gray Wagtail migrates from the Himalayas, the Forest Wagtail migrates from China or East Asia, as also the Taiga Flycatcher. I noticed a Common Snipe which was hiding in the grass close to the water. A pair of Spot-billed ducks landed in the middle of the dam. The Common Kingfisher and a White-throated Kingfisher were busy flying above the water surface for their turn to catch the fish. There was not much movement of birds in the area planted with Eucalyptus but surprisingly a bunch of vernal hanging parakeets were perched there on the branches. When I came back to the PHCC nursery, I noticed several more bird species such as the White-bellied Drongo and the Black-hooded Oriole. The full-grown trees and shrubs within the PHCC centre also provided a habitat for the birds.
Before I left I met and talked with the lady who works in the nursery and who belongs to a tribal community of the Palani hills. The knowledge of the tribal people can be used to study and understand various subjects in these hills, especially the mammals like the Sambar Deer, the Dhole, the Common Otter and the Small-clawed Otter. It is high time that a study of the otters habitat and population was taken up as it has not been done for the past twenty years. The water quality can be studied to understand the level of effluents in the Kuthiraiyar dam. Otter prey species can also be studied to understand the possibilities for improving the habitat for the otters.
I returned to Kuthiraiyar after a year during the first week of 2021. Due to the surplus monsoon rain the dam was full. Some areas of the forest were submerged and most of the saplings planted in the previous year were under water. Afforestation is really a challenging task due to climate change. The little efforts we put to mitigate climate change are hampered because of the existing climate change! The monsoon brings surplus or deficient rain and challenges afforestation efforts. In addition, the saplings need to be protected from cattle grazing as well. To restore natural ecosystems requires much effort, with climate and other external factors adding to the challenge. However, the reclamation process is promising in Kuthiraiyar and we hope the natural habitat can bring back more migratory birds and otters in the coming years. The primary forest should be protected to retain the native species of flora and fauna.
Article Published in Leaf Litter Magazine Dec 2021. ©Satheesh Muthu Gopal
Read my other articles also and leave your comments below.
The remaining grasslands of Palani Hills
தெருவில் தானியங்கள் சிதறுவதில்லை.
ஓடுகள் வேய்ந்த வீடுகளுமில்லை.
மருந்துகள் இல்லா கழனியுமில்லை.
வீட்டைச் சுற்றி மரங்களுமில்லை.
பல நூறாண்டுகளாய் மனிதனோடிருந்தவை.
வாழிடம் தொலைந்ததால் வேறிடம் சென்றவை.
மீட்டுவர மனமிருந்தால்
நிச்சயம் வந்துவிடும்.
வீட்டில் ஒரு கூடமைத்தால்
நிரந்தரமாய் தங்கிவிடும்.
விட்டுப்பிரிய மனமில்லை.
சிட்டுக்குருவிகளுக்கு அழிவில்லை.
கீச்சொலிகளால் காற்றை நிறைக்கும் குருவிகளுக்கு
எங்கேயும் எப்போதும் இடமுண்டு.
நீருக்குள் மூழ்கி
சில வினாடிகளுக்குப் பிறகு
சற்று தொலைவில் மேலெழும்பிவரும்
சிறிய நீர்க்காகம்,
அவ்வப்போது நீருக்குள் தாமதிக்கும்
காரணத்தை
வெளியே வரும் போது
அதன் அலகில் கவ்வியிருக்கும்.
இருகால்களாலும் இறுகப்பற்றிய மரத்தை
கருத்தவாலால் அழுத்தி
தலையை சற்றே பின்தள்ளி
நொடிக்கிருமுறை
கூரிய அலகால் விசையோடு மோதி
பட்டைகளை பிளந்து
நீண்ட நாவால்
கணுக்காலிகளை பிடித்துண்ணும்
பொன்முதுகு மரங்கொத்தி
ஒளிபுகா அடர்வனத்தின்
சுடர்.
சின்னஞ்சிறு பூக்களையும்
விதைகளையும் பழங்களையும்
விரும்பி உண்ணும்
குட்டைக்கிளி,
செம்பருத்தியின் காம்பில்
தலைகீழாகத் தொங்கும் அழகில்
ஒரு மலையின் மமதை
கவிழ்ந்து கிடக்கிறது.
அகன்ற சிறகுகளை விரித்தபடி
தண்ணீரின் மேற்பரப்பில்
விமானம் போல பறந்து செல்லும்
கூழைக்கடா
நீரில் சறுக்கி
பிறகு நீந்தும் பொழுது
பரிசல் போலாகிவிடுகிறது.
பெருநகரமானாலும் சிற்றூரானாலும்
மனிதர்களின் அலட்சியத்தால்
பெருகிவரும் குப்பைகளை
துப்புறவு செய்து
தூய்மையாக்கும் காகங்கள்
அடர் வனத்திலும் அறிவிக்கிறது
மனிதர்களின் இருப்பை.
மரக்கிளையில் மறைந்திருந்து
விடியலை அறிவிக்கிற ஆண் குயில்
கார் மழைக் காலங்களில்
விலகாத இருள் போல
கூச்சம் கலையாமல்
சட்டெனப் பறந்து
மற்றுமொறு மரக்கிளையில்
அமர்ந்தபடி
கூவலைத் தொடர்கிறது.
சிறகுகள் படபடக்க மேலெழும்பி
அரைவட்டமடித்து
கயிறறுந்த பட்டம் தரையிறங்குவது போல்
மாடுகளின் மீதமர்ந்து
உண்ணிகளை பிரித்தெடுத்து
வெட்டுக்கிளிகளை இரையாக்கி
கால்நடைகளை காத்துவரும்
உண்ணிக் கொக்குகளால்
பயனுறுகிறது மானுடம்.
பழனிக்கும் திருப்பூருக்கும்
திருநெல்வேலிக்கும்
இமயம் கடந்து
வலசை வரும்
பட்டை தலை வாத்துகள்
பன்முகத்தன்மை கொண்ட
இந்திய நிலங்களின் நீளத்தை
தன் நிழலால் அளந்துவிடுகின்றன.
மலைத்தொடரின் சாலையோரம்
மாஞ்சிட்டுகள் விளையாட
அதிர வரும் பேருந்து
எழுப்புமந்த ஒலிமாசால்
திகிலுற்ற சிட்டுகள்
திசைமாறி பறந்துவிட
பெண்சிட்டை தேடுமொறு
ஆண்சிட்டின் கண்களில் தெரிகிறது
காதலும்
தொலைந்துபோன காடும்...
யானையை அதிகம் நேசிக்கும் நண்பர் ஜி.சிவகுமார் அவர்களின் சிறுகதை தொகுப்பு "வெம்பு கரி". மிக அருமையான சிறுகதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளின் களம் பழனியை சுற்றியே இருப்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. மிக எளிமையான நடை. மிக நுட்பமான அவதானிப்புகளை வார்தைகளாக்கி அருமையான கதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சாமானிய மனிதனின் எண்ணத்தில் இருந்து எழுதியிருப்பதே கூடுதல் சிறப்பு.
ஜன்னல் ஓரம் பேருந்தில் இடம் தேடும் ஒருவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதிலும், பேருந்திலிருந்து பொறுப்பற்று குப்பைகளை தூக்கி எரியும் ஒருவனை எச்சரிப்பதிலும் என எல்லா கதைகளிலும் சிறப்பான எழுத்துக்களை கதையின் சுவாரசியம் குறையாமல் கூட்டிச் செல்கிறார். பெரும்பாலான கதைகளில் நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது.
யானையை அவர் வர்ணிக்கும் இடங்கள் அத்தனை அற்புதமாக இருக்கிறது. யானைக்கும் கதாபாத்திரத்துக்கும் நடக்கும் உரையாடல் இது வரை யாரும் யோசிக்காதது. யானையின் சின்ன சின்ன அசைவுகளையும் நுட்பமாக கவனித்து, எழுத்தில் கொண்டுவந்திருப்பது தனிச் சிறப்பு.
கதைகள் ஏற்படுத்தும் தாக்கமே இந்த நூலின் வெற்றியாக பார்க்கிறேன். நிச்சயம் சிறுகதை வாசகர்கள் எல்லோராலும் வாசிக்கப் படவேண்டிய நூல். பழனியில் இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பது உள்ளூர் மக்கள் அதிகம் பேருக்கு தெரியாது. நிச்சயம் இவர் எழுத்துக்கள் பலரையும் சென்றடைய வேண்டும். மேலும் பல நூல்களை சிவகுமார் அவர்கள் எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்.
புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை
உருமறையாய் முட்டையிட்டு
வாழிடத்தில் வட்டமிட்டு
எதிரிகள் பக்கம் வந்தால்
குரலெழுப்பி திசைமாற்றும்
வல்லமையும் கொண்டதனால்
அரளிப்பூ ஆள்காட்டி
கூடு கட்ட தேவையில்லை...
பாலை நிலப்பரப்பை
பயனற்ற நிலமென்று
பனையெல்லாம் வெட்டி
வீட்டுமனையாக்கி
பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்
வாழிடமின்றி
அலையும் அப்பறவைகளின் பெயர்
பனங்காடை.
அடர்ந்த புதரிலிருந்து
சீரான இடைவெளியில்
அதிரும்படி குரலெழுப்பும்
செண்பகம்,
தாழப் பறந்து தரையிரங்கும்
விமானம் போல
சாலையின் குறுக்கே பறந்து
மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.
செந்தாமரை பூத்த குளத்தில்
நுண்ணிய நீர்த்தாவரங்களின் நடுவே
நீந்தி வரும் குள்ளத்தாரா
தண்ணீரில் பிரதிபலிக்கும்
மேகத்தின் பிம்பங்களை
சிறகோடு அணைத்துக்கொண்டபின்
மரக்கிளையில் அமர்ந்து
சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்
பொழிகிறது மழை.
செக்கச்சிவந்த வெட்சிப்பூக்களில்
ஒவ்வொரு துளி தேனையும்
நிதானமாக பருகும்
ஊர்த் தேன்சிட்டு,
அவ்வப்போது கண்ணாடியில்
பார்த்துக்கொள்ளும்
அதன் தேன் சிந்தும் அலகு
அழகு.
கலையாத மேகங்கள்
உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்பொழுதும்
உயர்ந்தெழுந்து தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்.
பறவையினங்களை
அவதானித்துக் கொண்டிருந்த
மாலை வேளையில்
நான் கவனிக்கத் தவறிய புள்ளி ஆந்தை
என்னை முன்பே பார்த்துவிட்டதை
காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டேன்.
நான் பார்த்ததும் பார்காததுபோல
தலையை மட்டும் திருப்பிக்கொண்ட
புள்ளி ஆந்தை
என்னைப் போலவே புன்னைகைத்துக் கொண்டிருக்கலாம்.
பட்டுப்போன பனைதானே
வெட்டிவிடலாம் என்றெண்ணி
இயந்திரத்தின் துணைகொண்டு
அடியோடு சாய்த்துவிட,
பனைமரப் பொந்துகளில்
வாழ்ந்துவந்த பைங்கிளிகள்
கூடடைய திரும்புகையில்
எழுப்புமந்த கீச்சொலியை
மொழிபெயர்க்க தேவையில்லை
சிற்றலையாடும் குளக்கரையில்
அந்தியின் மிச்சம் படர்ந்திருக்க
நித்திரை கொள்ள புள்ளினங்கள்
கருவை மரங்களை அடைந்திருக்க
நிச்சயம் கரைவரும் மீனினங்கள்
அறியாதிருக்க
அசையாதிருக்கும்
வக்கா..!!
COP 26 - Glascow மாநாட்டில் பிரதமர் மோடி 2070-ஆம் ஆண்டில் NET ZERO இலக்கை இந்தியா எட்டும் என அறிவித்திருக்கிறார். மேலும் வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் 1 Trillion $ அளவிற்கு பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வளரும் நாடு என்ற பெயரில் நாம் இந்த பருவ நிலை பிறழ்விலிருந்து (Climate Change) தப்பிக்க நினைத்தால் அது இந்த தேசத்தின் தற்கொலைக்குச் சமம். United Nations Framework Convention on Climate Change ஆய்வறிக்கையின்படி புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் போய்விடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 2050க்குள் NET ZERO என்ற இலக்கை எல்லா நாடுகளும் அடைந்ததாக வேண்டிய அவசர சூழலில் நாம் இருக்கிறோம். இப்படியான இக்கட்டான தருணத்தில் நாம் இன்னும் கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? இந்தியா போன்ற நாடுகள் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா? இது போல காலம் தாழ்த்துவது மற்ற நாடுகளின் செயல்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்யாதா?
மேலும் இது போன்று மிக முக்கியாமான பிரச்சனைகளை விவாதிக்கும் இடத்தில பிரதமர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாமே? காலத்தை இதற்கு மேல் வீணடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. புதிப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (Renewable Energy) மாற வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கிறோம். புதை படிவ எரிமங்களை (Fossil Fuels) நாம் விரைந்து கைவிட வேண்டும். நம்முடைய கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்க காலத்திலும் கார்பன் வெளியேற்றத்தில் குறையேதும்மில்லை. அப்படியானால் இன்னும் வேகமாக நாம் இந்த புவியின் சூழலை அழிவை நோக்கி நகர்த்திச் செல்கிறோம். இந்த சூழ்நிலையில் நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தை பாதுகாப்பதும், நீடித்த நிலைத்த வளர்ச்சியும் மட்டுமே நம் எதிர்காலத்தை பாதுகாக்கும். பிரதமர் வாயை திறந்தாலே எதிர்வினையாற்றும் எதிர் கட்சிகள் இந்த விஷயத்தில் விமர்சனம் செய்யாதிருப்பது ஏன்? பிரதமரின் பேச்சை ஆதரிக்கிறார்களா? பருவ நிலை பிறழ்வு என்பது அவர்களுக்கு முக்கியமான பிரச்னையாக இல்லையா?
இது உலகளாவிய பிரச்சனை. இந்த புவியில் இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி எல்லா உயிரினங்களையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது நாம் தான் . இதற்கான தீர்வுகளையும் நம்மால் உருவாக்க முடியும். நிலக்கரியை கைவிடுவது பற்றி அமெரிக்காவும் சீனாவும் வெளிப்படையாக அறிவிக்காத சூழலில் இந்தியா மட்டும் ஏன் நிறுக்கிக்கொள்ள வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிலர் விவாதம் செய்வதும் நடக்கிறது. இப்படியே நாம் விவாதம் செய்து கொண்டிருந்தால் அடுத்த தலைமுறைக்கு செய்யும் தீங்கு வேறு இருக்காது.
சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுடன் உரையாற்றிய பிரதமர் பருவ நிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை என்றார். பருவ நிலை மாறவில்லை. நாம் தான் மாறியிருக்கிறோம் என்றார். தற்போது பிரதமரின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. அவர் பருவநிலை பிறழ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார் அல்லது அந்த சூழலுக்கு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக வந்து சேர்ந்திருக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் வளர்ச்சி திட்டங்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு சாலை அமைக்க மீண்டும் மீண்டும் மலைகளை உடைக்க முடியாது. ஊழல் இல்லாத தரமான சாலைகளை அமைத்தால் நாம் மீண்டும் மீண்டும் இயற்கையை அச்சுறுத்த வேண்டியதில்லை.
நுகர்வு கலாச்சாரத்திலிருந்து மக்களை விடுவிக்கும் நீடித்து நிலைக்கும் (Sustainable Development) வாழ்க்கை தரத்திற்கு மக்களை கொண்டு செல்ல அரசுகள் முன்வர வேண்டும். நெகிழி பைகளை தடை செய்யவே தயங்கும் அரசுகளை வைத்துக் கொண்டு எப்படி பருவ நிலை பிறழ்வை நாம் சமாளிக்க போகிறோம்? ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புயலும், மேகவெடிப்பும், நிலச்சரிவுகளும், வெள்ளமும் வறட்சியும் நமக்கு நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறது. நாம் வீடியோக்களை ஷேர் செய்துவிட்டு கடந்துகொண்டே இருப்பது நல்லதல்ல. இந்த பூமி தோன்றி 24 மணி நேரம் ஆனதாக கணக்கில்கொண்டால், மனித இனம் தோன்றி வெறும் ஒரு நொடி மட்டுமே ஆகிறது. இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது இயற்கைக்கு தெரியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கானுயிர்கள் ஆயிரம்
உண்டென்றாலும்
ஓரிடவாழ்விகள் தனிச்சிறப்பு.
பல்லுயிர்ச் சூழல்
பலவென்றாலும்
சோலைக்காடுகள் தனிச்சிறப்பு.
புள்ளினங்கள் ஆயிரம்
உண்டென்றாலும்
பூங்குருவிகள் தனிச்சிறப்பு.
சிறப்புகள் யாவும் அமையப்பெற்றும்
சோலைக்காட்டின்
சூழல் சிதைவால்
சிக்கலில் தவிக்கிறது
பழனி மலைப் பூங்குருவி
ஓரிடவாழ்வி - Endemic Species
சோலைக்காடு - Shola Forest
பல்லுயிர்ச் சூழல் - Bio-Diversity
புள்ளினங்கள் - Bird Species
பழனி மலை பூங்குருவி - Palani Laughing Thrush.
Laughing Thrush என்ற பறவை இனத்திற்கு சரியான தமிழ் பெயர் கிடைக்கவில்லை. பூங்குருவி என பயன்படுத்தி இருக்கிறேன். வேறு சரியான பெயர் இருந்தால் பின்னூட்டம் செய்யுங்கள். மாற்றிக் கொள்கிறேன்.
கற்கள் பொதிந்த ஓடைக்கரையில்
சிறுதேளையோ பூரானையோ
இரையாக்கியபின் கிளையிலமரும்
கொண்டலாத்தி
செங்கதிர்கள் பிடரியில் ஊடுருவ
மகுடம் சூடிய மன்னரைப் போல
இருக்கிறது
இளஞ்சாம்பல் மந்தியோ
மலையணிலோ முயலோ
மரகதப் புறாவோ
மயில் குஞ்சுகளோ
கானுயிர்கள் எதுவாயினும்
கரும்பருந்தின் நிழல் ஊரும் காட்டில்
கவனம் தேவை
அன்பிற்குரிய நண்பர் செழியன் அவர்கள் "பறவைகளுக்கு ஊரடங்கு" என்ற நூலை எழுதியிருக்கிறார். பறவைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் செழியன். தன்னுடைய அனுபவங்கள் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பறவை சரணாலயங்களுக்கும் சென்று அங்குள்ள பறவைகளை அவதானித்து தன் அனுபவம் மூலமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். பறவை சரணாலயங்கள் மட்டுமல்லாது, வீட்டை சுற்றியே பறவைகளை அவதானிப்பது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். 24 கட்டுரைகளை இந்த நூலில் எழுதியிருக்கிறார். இதில் குறிப்பாக ஆமூர் வல்லூறு பற்றிய கட்டுரை முக்கியமானதாக கருதுகிறேன். உலகில் அதிக தூரம் வலசை செல்லும் இந்த வல்லூறுகள் வட கிழக்கு இந்தியாவை கடக்கும் போது அதிக அளவில் வேட்டையாடப்படுவதை பதிவு செய்திருக்கிறார்.
இன்று பறவை நோக்குதல் என்பது வளர்ந்து வரும் ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த நிலையில் நண்பர் செழியன் அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
ஒன்று அவருடைய அனுபங்களில் இருந்து அவர் பறவைகளை நிதானமாக கவனித்தார் என்பது புரிகிறது. அவரிடம் அவசரம் இல்லை. ஒரு நத்தை குத்தி நாரை, நத்தையை முழுவதும் விழுங்கும் வரை அவர் அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது போல ஒரு மஞ்சள் மூக்கு நாரை ஒரு மீனை முழுவதும் விழுங்கும் வரை அதை பொறுமையோடு அவதானித்திருக்கிறார். அது எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாவது, அவர் பல்வேறு பகுதிகளுக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியிருக்கிறார். நேரமின்மை காரணமாக இன்று பலரும் சொந்த வாகனங்களையே பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்.
இந்த இரண்டு காரணங்களுக்கும் அடிப்படை பொறுமை. அதை பறவை ஆர்வலர்களும் நிச்சயம் கையாள வேண்டும். வாசிக்க வேண்டிய புத்தகம்.
இந்த நூலை வாங்க காக்கை கூடு
அல்லி பூத்திருக்க
ஆகாயம் வெளுத்திருக்க
தக்கை மிதப்பது போல
தண்ணீரில் கூடமைத்து
பொரித்த குஞ்சுகளை
பத்திரமாய் பாதுகாத்து
பருந்துகள் பக்கம் வர
பயமின்றி எதிர்த்து நின்று
இரை தேட உடனிருந்து
இலைமேல் நடைபழக்கி
தலைமுறைகள் காத்திடும்
நீள வால் இலைக் கோழி.
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
பிற்பகலில் கொட்டித்தீர்த்த
கனமழைக்குப் பிறகு
தூவானம் தொடர்கின்ற
மாலை வேளையில்
தேநீரில் சுவையை கூட்டுகிறது
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து
பாடிக்கொண்டிருக்கும்
கருஞ்சிட்டு
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :