Dec 31, 2022

புத்தாண்டு வாழ்த்துகள்

தொடர்ந்து என்னுடைய வலைப்பூவை வாசித்து ஆதரவளிக்கும் அத்தனை வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

2022-ல் பல்வேறு நாடுகளில் இருந்து வாசித்த அனைவருக்கும் நன்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....!!

🐆🐅🦌🦓🦘🦜🦩🦉🐬🦋🐌🌺🌼🌿🌵🍁🦍




Dec 18, 2022

ஆறுமணிக்குருவி [Indian Pitta]

மர நிழலில, புதர் இருளில்

மண் மூடிய இலைச் சருகில்

வானவில்லைக் காட்டிலும்

கூடுதல் நிறங்கொண்டு

வண்ண வண்ண தூவிகளால்

பொன்னெனவே மின்னும்

ஆறுமணிக்குருவி

அழகிய குரலால்

அந்தியை அறிவிக்கிறது.

Photograph by Raj.



Dec 17, 2022

கல்குருவி [Indian Courser]

புற்கள் முளைத்த பாலைநிலத்தில் 

தத்தித்தாவும் வெட்டுக்கிளிகள்.

சரளைக் கற்கள் சிதறிக்கிடக்கும்

செம்மண் பரப்பில் வண்டினங்கள்.

புற்கள் நடுவே தலையை நீட்டி

வெட்டுக்கிளிகளைப் பிடித்துண்ணும்.

கற்களைப் புரட்டி பூச்சிகள் தேடி

சமநிலை செய்து உயிர் வாழும்.

அசையாதிருக்கும் நேரத்தில்

அதன் இருப்பை அறிய முடியாது.

உருமறை பெற்று பரிணமித்த

உன்னதப் பறவை கல்குருவி.

Photography by Karthik Hari




Dec 16, 2022

பழனிமலை சோலைக்குருவி [White-bellied Sholakilli]

பழனி மலைத் தொடரில் 

பனி பொழியும் வைகறையில் 

மேல் மலையின் சோலைக்காட்டில் 

மிதந்து வரும் பூங்காற்றில் 

உலகிற் சிறந்த கருவிகளால் 

இசைக்க முடியா இன்னிசையை 

உள்ளம் உருக பாடிவிட்டு 

சிட்டாய் மறையும் சோலைக்குருவி...!!




Dec 8, 2022

Talking Chickens [Kids Bedtime Story -1]

Kate is a 9-year-old girl living in a small beautiful village called Solva in Wales. One day when she woke up from bed, she got a surprising skill. She did not realize it until her pet cat responded. As usual, she said "Good Morning" to her fuzzy cat. The cat immediately responded and said "Good Morning". She was thrilled. She called her parents and told them the cat is speaking with her. When her parents interacted with the cat, it was silent. Then they understood that the cat responds only when Kate talks to it. The news spread over the village. 


When the neighbor came with his pet dog, Kate was able to interact with the dog too. Everyone in the village was amazed by the special skill which Kate had. Kate was able to speak with all the animals in the village. One day a farmer came to Kate's house and asked for help. Kate immediately agreed to help him and asked "how can I help you?"

The farmer said "I have more than 50 chickens on my farm. But I see the count is reducing every day. I think the Red fox is coming in the night and capturing the chicken. If you can talk to the chickens and ask for more information about the fox, I'll search for the fox in the correct direction and kill it. Could you please help me?". Kate smiled at the farmer and said, "Sure, I will talk to the chickens immediately".

Kate rushed to the farm with the farmer and asked the chickens about the fox who is capturing the chickens every day. One of the chickens came to Kate and replied "It is not a fox, it's a thief". Kate was surprised by the answer and asks for the identification of the thief. The chicken explained. Kate explained the whole story to the farmer, and he immediately recognized the thief. The farmer went to the thief's house and found all his stolen chickens. The farmer happily brought back all the chickens to his farm and thanked Kate for her big help.

Nov 28, 2022

இருவாச்சி காவியம்

பறவைகளைப் பார்க்கத் தொடங்கிய பிறகு இருவாச்சியை பார்க்க வேண்டும் என்பது நெடு நாள் ஆசையாக இருந்தது. பொதுவாக தமிழ் நாட்டில் காணப்படும்  நான்கு வகை இருவாச்சிகளில் எழிலார்ந்த இருவாட்சி "பெரிய இருவாட்சி" (Great Hornbill) தான். எங்கேயாவது ஒரு காட்டில் பார்த்துவிட மாட்டோமா என்ற தேடல் இருந்துகொண்டே இருந்தது. ஒருமுறை என்னுடைய நண்பர் வால்பாறையில் அந்த பறவை இருக்கும் இடத்தை கூறினார். அவர் சொன்ன அந்த குறிப்பிட்ட மரத்தில் அதை நிச்சயம் பார்க்கலாம் எனத் தெரிந்துகொண்ட போது ஆர்வம் அதிகமானது. பழனியில் இருந்து இருவாச்சியைக் காண வால்பாறை கிளம்பினேன். 



கிட்டத்தட்ட 100 கி.மீ தூரப் பயணத்தில் இருவாச்சி பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது. சரியான அடையாளங்களை குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அதன்படி அவர் சொன்ன அந்த மரத்தை அடையாளம் கண்டுகொண்டேன். அந்த மரத்தில் இருந்து ஒரு 100மீ தூரம் தள்ளி நின்று, அந்த மரத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். வேறு எந்த பறவைகளின் மீதும் என் எண்ணம் திரும்பவில்லை. எப்படியும் இருவாச்சியை பார்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் என்னால் அவற்றை பார்க்க முடியவில்லை.

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எனக்கு நேர் எதிரில் தரையில் ஏதோ இருப்பதை அறிந்து உற்று நோக்கினேன். அது கேளையாடு. இவ்வளவு நேரமாக நான் அங்கேயே இருந்தும் அந்த மானை கவனிக்கவே இல்லை. அது எப்போது வந்தது? நான் வரும் போது அங்கே தான் இருந்ததா? என கேள்விகள் மேலெழும்பின. ஆனால் அந்த மான் என்னை கவனித்துக் கொண்டுதான் இருந்திருக்கும். ஒருவேளை இருவாச்சியும் அப்படித்தான் எங்கேயாவது இருக்கிறதா? என்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறதா? என்னால் தான் பார்க்க முடியவில்லையா என கேள்விகள் என்னை துரத்தின. இன்னும் தீவிரமாகத் தேடினேன். முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருந்தேன்.

மரப்பொந்துகளில் கூடமைக்கும் இருவாச்சி அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை பெண் பறவை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும். பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை முறைதான் இந்தப் பறவையினத்தை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இருவாச்சியின் எச்சங்களால் காடு வளர்கிறது. இருவாச்சி விதைப் பரவல் செய்வதில் முக்கிய பறவையாக விளங்குகிறது. 

நான் இருவாச்சியை தேடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் சோர்வே மிஞ்சியது. இன்றைய தினம் அதை பார்க்க முடியாதோ என்ற எண்ணம் மேலோங்கியபோது, நான் பார்த்துக் கொண்டிருந்த மரத்தின் கிளையில் அழகாக வந்தமர்ந்து இருவாச்சி. தான் கொண்டு வந்திருந்த உணவை பொந்தில் இருந்த பறவைக்கு ஊட்டியது. பொதுவாகவே கூடுகளை படம் எடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியோடு இருப்பேன். ஏனென்றால் பறவையின் கூடுகளை படம் எடுக்கும் போது அதில் இருக்கும் குஞ்சுகளோ, அதன் பெற்றோர்களோ அச்சப்பட வாய்ப்புண்டு. மேலும் கூடுகளை படம் எடுப்பவர்களை இது ஊக்குவிக்கும். படம் எடுப்பவர்களால் கூடு களையவும் வாய்ப்புண்டு.

ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்த பறவையோ இருவாச்சி. இனி இவற்றை எப்போது காண்பேன் எனத் தெரியாது. என் கண் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தது. ஒரே ஒரு படம் மட்டும் எடுக்கலாமா என்ற சிந்தனை ஒரு பக்கம் உதித்தாலும், கூடுகளை படம் எடுக்க வேண்டாம் என்ற என் உறுதியில் இருந்து பின்வாங்க முடியவில்லை. நான் என் கேமிராவை உள்ள வைத்துவிட்டு அதை பார்த்துக் கொண்டே இருந்தேன். இருள் கவியத் தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பினேன். இமயத்தில் இருந்து வலசை வந்த சாம்பல் வாலாட்டிக் குருவி சாலையில் வந்து அமர்ந்தது.

Nov 23, 2022

Melodies of Bombay Shola

Shola forest is endemic to the Western Ghats and is one of the most unique ecosystems present in our country. The name Shola was given by the Britishers which originates from the Tamil word Solai. The Bombay Shola got its name because Colonel Partridge of the then Bombay (now Mumbai) Regiment of the Indian Army had a cottage there. Bombay Shola had natural grasslands that are close to Kodaikanal. Today the grasslands are encroached by urban settlements and monoculture of Eucalyptus trees. Even though 85% of the grasslands are encroached by Pine, Eucalyptus, and Acacia trees in the upper hills, a few sholas are still thriving in some places. 




Bombay Shola is one of the most vulnerable forests surrounded by resorts, roads and markets. However, despite these disturbances, the Shola provides shelter for myriad birds’ species and a few mammal species like Indian Gaur Bos gaurus, Malabar Giant Squirrel Ratufa indica and Indian Giant Flying Squirrel Petaurista philippensis. Probably two centuries before this place would have been a better habitat for Sambar Deer Rusa unicolor, Smooth-coated Otter Lutrogale perspicillata, Indian Elephant Elephas maximus indicus etc. Due to the degradation of grasslands, the Nilgiri Pipit Anthus nilghiriensis lost its habitat in these areas and are now in a precarious state. But still, the dense shola is a good habitat for the endemic birds such as the Palani Chilappan (Palani Laughing Thrush) Montecincla fairbanki and White-bellied Sholakili Sholicola albiventris


I have been visiting Shola since 2010. During my initial visits, I witnessed some of the common birds seen in the sholas such as the Grey-headed Canary-flycatcher Culicicapa ceylonensis, Black-and-orange flycatcher Ficedula nigrorufa, Indian Blackbird Turdus simillimus, and Palani Chilappan Montecincla fairbanki etc. As a bird enthusiast, I document the bird sightings every time I visit Shola and most of the species sighted are endemic to the Ghats. Whenever I stay overnight, I look forward to waking up to the calls of the Shola Avifauna the next morning. Out of all the birds, the call of White-bellied Sholakili Sholicola albiventris is very unique and rhythmic. During the early morning hours when the shola forest is silent due to the absence of man-made noises such as loudspeakers, horns etc., the call of White-bellied Sholakili fills the air with musical notes.



The Palani Chilappan Montecincla fairbanki is a gregarious bird that can be found in the montane grasslands and sholas. I noted an interesting behavior of the birds popping out and hiding back in the bushes as if playing a game of hide-n-seek. The continuous call of “pe-kee-ke” helps to identify these birds. Palani Chilappan is purely dependent on the montane grasslands and sholas for their habitat.

Black and Orange Flycatcher Ficedula nigrorufa creates beautiful notes which are shorter but apparently rhythmic and metallic. The upper shola road helps to get the broader view of the canopy of Bombay shola where the Nilgiri Flycatcher Eumyias albicaudatus can be well sighted. Another tiny endemic bird of Western Ghats, the Nilgiri Flowerpecker Dicaeum concolor, is common here and the repetitive “tzrik” notes help to find their presence. The Nilgiri Woodpigeon Columba elphinstonii also endemic to Western Ghats and slightly bigger than the Rock-pigeon can seldom be seen in Bombay shola. 


The other colourful birds sighted here are Yellow-browed Bulbul Acritillas indica, Scarlet Minivet Pericrocotus flammeus, and Squaretailed Bulbul Hypsipetes ganeesa. The Indian White-eye Zosterops palpebrosus and Black-lored Tit Machlolophus aplonotus can be easily found in low hanging branches and fences of the Bombay Shola. The glorifying flame on the dead trees with the high-pitched trill or drum call is sure to be a Greater Flameback Chrysocolaptes guttacristatus



The Velvet-fronted Nuthatch Sitta frontalis forage on the branches and trunks of the old trees which are coated with lichens and moss. The reddish bill and aquamarine upperparts of these dwarf creatures get glorified when the dense sholas are lit by the sunlight.


The Shola Forest is pleasant in the morning hours rather than in the evening. One can find the sounds of the Shola to be soothing however, due to the vehicular movement in upper and lower Shola Road, there is a lot of disturbance during the daytime. High decibel horns used in heavy vehicles disrupt the ambiance of the forest as well the resorts and pilgrims around the area cause environmental pollution. To protect and preserve the Bombay shola and its species, the government should take immediate action towards noise pollution. Noise is still not recognized as pollution among many of us. We need to think about the tiny creatures and their ability to tolerate the high decibel sounds. 

I again visited the place post COVID-19 pandemic lockdown and asked the caretaker about how the sholas looked with no human activity. He took a deep breath and said, “It felt like heaven”.


Article Published in BUCEROS (BNHS) Magazine Nov 2022 [BUCEROS Vol. 27, No. 1, 2022]. ©Satheesh Muthu Gopal

Nov 19, 2022

ஆண் எனும் அற்புதம்

இருவாட்சி என்றொரு பறவை உண்டு. மரப்பொந்துகளில் கூடமைக்கும் இப்பறவை அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும் தாய்மையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது ? ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் பணி செய்துகொண்டிருக்கும் ஆண் பறவையின் அற்புதங்களை எப்படி பேசாமல் விடுவது ?  பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பறவை தானே... சிறகை விரித்து உல்லாசமாக வானில் பறக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதன் துயரங்கள் புரியாது. மனிதர்களிடமிருந்தும் தப்பித்து இத்தனை விஷயங்களையும் அந்த ஒரு ஆண் பறவை செய்ய வேண்டியிருக்கிறது. 


இப்படித்தானே இந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களும் பரிணமித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன, மனிதர்கள் உள்பட. இந்த உலகில் எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழ ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. இத்தனை அர்ப்பணிப்புடன் வாழும் ஆண், பெண்களைப் போல போற்றப்படுவது இல்லை. சமூக குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களின் பெயரே பிரதிபலிப்பதால் ஒட்டுமொத்த ஆண்களும் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டியது இல்லை. ஆனால் ஆண்களின் மீது அப்படி ஒரு சாயம் பூசப்படுவதும் அநீதி இல்லையா ? ஆண்களின் உணர்வுகளும், கனவுகளும் ஆசைகளும் உலகம் முழுக்கவே பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் சமூக அரசியல் மாற்றங்களுக்கான முன்னெடுப்புகளை செய்வதில் பெரும்பாலும் ஆண்களே முன்னிற்கிறார்கள்.

 இருவாட்சியின் குஞ்சுகளுக்கு தாயின் கனிவு தான் தெரியும். தந்தையின் அர்ப்பணிப்பு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் ஆண் குஞ்சுகள் பெரிதானதும், தன் தந்தையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆண்களின் தியாகங்கள் பேசாப் பொருளாகவே இருப்பதற்கு ஆண்களும் காரணம் தான். பரிணாம வளர்ச்சியில் எல்லா திறமைகளையும் பெற்றுக் கொண்ட ஆண், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளவேயில்லை. தன்னுடைய கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தப்படும் ஆண் யானைகளைப் போல, ஆயிரக்கணக்கான பசுந்தாள்களைக் கொண்டு கூடமைத்த பிறகும், நிராகரிக்கப்படும் ஆண் தூக்கணாங்குருவியைப் போல எத்தனையோ வலிகளோடு வாழும் ஆண்கள் அத்தனை பேரும் இந்தப் புவியில் உயிர்கள் தழைத்திருக்க காரணமாக இருக்கும் அற்புதங்கள் இல்லையா ?


Nov 16, 2022

அதோ அந்தப் பறவை போல : திரு.முகமது அலி

தமிழில் எழுதப்படும் பசுமை இலக்கிய நூல்களின் மகுடத்தில் மற்றுமொரு இறகு இந்த நூல். "அதோ அந்தப் பறவை போல" என்ற தலைப்பு சினிமா பாடல் வரியாக இருந்தாலும், இது பறவையியல் பற்றிய முழுமையான அறிவியல் புத்தகம். அது எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம். 


பறவையியல் சார்ந்து புதிய தமிழ் சொற்களை இந்த நூலில் காண முடிந்தது இந்த நூலின் தனிச் சிறப்பு. கூடொட்டிப்பிழைத்தல், முன் முதிர் குஞ்சுகள், பின் முதிர் குஞ்சுகள் என புதிய சொற்களின் மூலம் பறவையியலை  எல்லோருக்கும் புரியும்படி எளிமை படுத்துயிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் உடல் அமைப்பை தனித்தனியாக விவரித்து வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு. சிறிய கோட்டோவியங்களின் மூலம் பறவைகளின் பறத்தல் முறைகள், அவற்றின் அலகு, கால்கள், நகங்கள் என தனித்தனியாக விவரித்திருப்பது எல்லோருக்கும் புரியும்படியாக இருக்கிறது. முன் முதிர் குஞ்சுகள் பரிணாம வளர்ச்சியில் இயல்பிலேயே உருமறைத் தோற்றம் கொண்ட முட்டைகளை பெற்றிருப்பதும், அவற்றின் மஞ்சள் கரு பின்  முதிர் குஞ்சுகளை விடவும் அதிகமாக இருப்பதும் என வியப்புக்குரிய, அதே நேரம் நம்பகத்தகுந்த எளிய உதாரணங்கள் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் வலசை பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் முக்கியமானவை. பறவை என்றால் என்ன, அவற்றுக்கான வரைமுறைகள், இனப்பெருக்கம், அவற்றுக்கான காலங்கள் அதற்கான காரணங்கள் என விரிவாக பேசுகிறது இந்த நூல். பல்வேறு பறவை இனங்களின் வேறுபட்ட கூடு கட்டும் முறை மற்றும் அதற்கான காரணங்கள், அது பரிணாம வளர்ச்சியோடு எப்படி தொடர்புபடுத்திப் பார்ப்பது என பல பரிணாமங்களில் பறவைகளின் அறிவியலை அலசுகிறார் ஆசிரியர். 

சிறப்புத் தகவல்கள் என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் அத்தனை ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும், சில நேரங்களில் அழிந்து வரும் பறவைகளை பற்றிய செய்திகள் கவலை தருவதாகவும் இருக்கிறது. பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் ஏன் வாழ முடியாது என்பதற்கான விடையை இந்த நூலை வாசித்து முடிக்கும்போது எல்லோராலும் உணர முடியும். 


இணையத்தில் வாங்க : https://crownest.in/product/adho-antha-paravaikla-pola-by-muhammad-ali/



Nov 14, 2022

சீகார்ப்பூங்குருவி [Malabar whistling thrush]

பாறைகளில் மோதி

கீழிறங்கும் மலையருவி

இடைவிடாதெழுப்புமந்த 

பேரொலியின் காற்றினூடே

சீழ்கையொலி மேலெழும்ப

கருவிளை நிறங்கொண்டு

சிறகசைத்து வரும் பறவை

சீகார்ப்பூங்குருவி.


கருவிளை என்பது அடர் நீல நிற சங்குப்பூ 


Nov 11, 2022

ரஷ்யாவிலிருந்து சிங்கப்பூருக்கு..!!

சிங்கப்பூரில் ஓடும் சிராங்கூன் நதியின் கரையில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய பறவையை கண்டேன். மரத்தின் கிளைகளுக்கு நடுவில் இருந்து அவை ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தன. உயரமான மரங்களில் அமரும் பறவைகளையோ அல்லது அடர்ந்த கிளைகளுக்கு இடையே இருக்கும் பறவைகளையோ பார்ப்பது சற்று கடினமானது. நான் அவதானித்துக் கொண்டிருந்த போதே நான் வழக்கமாக பார்க்கும், மலேசிய விசிறிவால் குருவிகள் (Malaysian Pied Fantail) இரண்டு அதே மரத்தில் இருந்து பறந்து சென்றன. இருப்பினும் அந்த சிறிய பறவையை எப்படியும் காண வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது. நம் கை சுண்டுவிரல் அளவே உள்ள அந்த பறவை சிறிது நேரத்தில் வெளியே வந்து வேறொரு மரத்தில் சென்றமர்ந்தது. "ஆர்டிக் கதிர்குருவி" (Arctic Warbler) எனப்படும் இந்த சிறிய பறவை ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வலசை  வருகிறது. பறவைகளின் வலசை குணங்கள் இன்னமும் அவிழக்கப்படமுடியாத பெரும் முடிச்சாகவே இருக்கிறது. 

Arctic Warbler

பறவைகள் வலசைக்கு மிக முக்கிய காரணம், வட துருவத்தில் குளிர் காலங்களில் அவற்றுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை தென் துருவம் நோக்கி வருகின்றன. மீண்டும் வசந்த காலத்தில் அவை தன்னுடைய நிலத்திற்கே சென்று கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நடைமுறையை பல  ஆயிரம் ஆண்டுகளாக அவை தொடர்ந்து செய்கின்றன. ஓரிடத்திற்கு வலசை வரும் பறவை, அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்திற்கு வருவது மிகப்பெரிய ஆச்சர்யம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை தன் இயல்பூக்கத்தில் வருவதாகவே பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றின் மரபணுவில் பொதிந்த இந்த இயல்பூக்கம் அவற்றை சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி செலுத்தலாம். 

Malaysian Pied Fantail

வலசைக்காக அவை தன்னை முன்பே தயார்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. சமீபத்தில் "Bar-tailed Godwit" என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியன் தீவுக்கு எங்கேயும் நிற்காமல் 11 நாட்கள் தொடர்ந்து பயணித்து வந்து சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து 11 நாட்கள் பயணிக்க அவை எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இப்படி வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் ஈர நிலங்களை நம்பியே வருகின்றன. நம்முடைய தேவைக்காக இந்த நிலங்கள் மாற்றப்படும் போது அவை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். நாடுகள், எல்லைகள், அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டைகள் அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமே. இவை எதுவம் அறியாத பறவைகள் தங்களுக்கான வாழிடத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. ரஷ்யாவின் எல்லையில் வானம் புகை படிந்து காணப்படுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆர்டிக் கதிர்குருவி மார்ச் மாதத்தில் திரும்பிச் செல்லும். அங்கே சென்று அவை உணவு தேடவும், கூடமைக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற சூழல் நிலவ வேண்டும். அதை ஆறறிவு(?) கொண்ட மனிதர்கள் செய்யவேண்டும் என்பதே நகைமுரண். 

Nov 10, 2022

கடல் : திரு.சமஸ்

சங்காயம் என்ற சொல்லை முதல் முறையாக இந்த நூலில் வாசித்து தெரிந்து கொண்ட போது மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை எவ்வளவு ஆழம் சூறையாடுவான் என்பதற்கு சங்காயமே உதாரணம். சங்காயம் என்பது மீன் குஞ்சுகள். இறால் மற்றும் சுறாக்களுக்காக விரிக்கப்படும் வலைகளில் சிக்கி, யாருக்கும் பயனற்று கோழித் தீவனமாக செல்லும் இந்த மீன் குஞ்சுகள் தான் கடல் வளத்தின் எதிர்காலம். 

இப்படி தமிழகத்தின் கடல் சந்திக்கும் ஒவ்வொரு சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார் சமஸ் அவர்கள். நிலமும் வனமும் சீரழிவதை நாம் தினமும் கண் முன்னே பார்க்கிறோம். ஆனால் கடல் வளம் கொள்ளையடிக்கப்படுவதும், மாசுபாடடைவதும் பெரும்பாலும் கவனம் பெறாமலேயே இருக்கிறது. இந்த நூலின் தரவுகளுக்காக சமஸ் அவர்கள் செய்த பயணங்களும் அர்ப்பணிப்பும் ஆச்சர்யம் ஊட்டுகிறது. ஒரு எழுத்தாளராக வருங்கால தலைமுறையின் மேல் அக்கறை கொண்டவராக அவர் தன் கடமையை செய்திருக்கிறார். அரசும் அதிகாரிகளும் இவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே எதிகாலத்திலும் கடல் வளம் ஓரளவேனும் காப்பற்றப்படும். 


பருவ நிலை பிறழ்வு மூன்றாம் உலக நாடுகளில் மிகப் பெரிய சவாலாக மாறிவரும் வேளையில், அதன் சாட்சியாக நம் கண் முன்னே இருப்பதும் கடல் தான். ஆவுளியா போன்ற அறிய உயிரினங்களை பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. பழவேற்காடு முதல் குமரி வரை எத்தனை கடலோர கிராமங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊருக்கும் ஏதோவொரு சூழலியல் பிரச்சனை இருப்பதும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது அந்த  ஊரும் மக்களும் தான் என்றால், நம் தலைமுறையின் அலட்சியத்தை விடவும் அபாயகரமான அச்சுறுத்தல் அடுத்து வரும் தலைமுறைக்கு என்னவாக இருக்கும் ?

மீனவன் என்ற சொல்லை உடைத்து கடலோடி என அறிமுகப்படுத்துகிறார். மீனவர்களுடனான, மன்னிக்கவும், கடலோடிகளுடனான உரையாடல் மூலமாகவே அதை தெளிவுபடுத்துகிறார். ஒரு விவசாயியை எப்படி நெல்லுக்காரன் என்று சுருக்க முடியாதோ அது போல ஒரு கடலோடியை மீனவன் என சுருக்க முடியாது என்று விளக்கும் இடத்தில் கடலோடு சேர்ந்து கடலோடிகளும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். 

பழனியில் வளர்ந்த எனக்கு கடல் என்பது எப்போதும் அதிசயம் தான். கடல் மீதான பார்வையை, கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை என பல பரிமாணங்களை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். 


யாருடைய எலிகள் நாம்?


Oct 15, 2022

யானைகளா ? கேபிள் காரா ? எது முக்கியம் ?

பழனி மலை முருகன் கோவிலில் இருந்து தென் திசையில் பார்த்தால் தெரியும் அந்த பசுமையான மலைத் தொடர் தான் பழனி மலைத் தொடர். மேகங்கள் அதிகம் இல்லாத மாலை நேரங்களில் மலைத் தொடரின் மையத்தில் இருக்கும் கொடைக்கானல் நகரில் விளக்குகள் ஒளிர்வதை காணலாம். பழனி மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த பகுதியில் இருக்கும் பறவைகள் பற்றியும் பல்லுயிர்கள் பற்றியும் நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மிகச் சிறந்த பல்லுயிர் சூழல் மிக்க இடமாக இது இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின், கொடைக்கானல் நகரின் வளர்ச்சியும், அயல் தாவரங்களின் பெருக்கமும், சுதந்திரத்திற்குப் பிறகு போடப்பட்ட புதிய சாலைகளும், அதிகரித்த வேளாண் நிலங்களும், பெருகிய சுற்றுலா தளங்களும் எண்ணற்ற சிக்கல்களை இந்த மலைத் தொடர் முழுக்க உருவாக்கின. 


மலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் ஒன்றான தேக்கந்தோட்டத்தில் பல பறவையினங்களை பார்க்க முடியும். ஆனால் அங்கும் நிறைய சிக்கல்களும் இடையூறுகளும் உள்ளன. மலைத் தொடரின் மேல் பகுதி புல்வெளி மற்றும் சோலைக் காடுகளால் ஆனது. அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. சமீபத்தில் சிறுத்தை வாகனத்தில் அடிபட்டு இறந்தது நினைவிருக்கலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளால் ஒட்டு மொத்த மலைத் தொடரும் குப்பைமேடாகி வருகிறது. சோலைக்குருவி என்ற அமைப்பு உயிரை கொடுத்து அந்த குப்பைகளை அகற்றி வருகிறார்கள். பல்வேறு அணில் இனங்கள் வாழும் இந்த மலைத் தொடரில் தான் அவை வாழிடத்தை தொலைந்து கொண்டிருக்கின்றன. குதிரையாறு பகுதியில் காணப்பட்ட நீர் நாய்கள் இப்போது இல்லை. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் இங்கு காட்டுத்தீக்கும் குறைவில்லை.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் இந்த மலைத் தொடரை காக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அரசுக்கும் உண்டு. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கேபிள் கார் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் வரை செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் செய்து முடிக்கும் முன்பே காடுகளுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. 2000 மீட்டர் உயரத்திற்கு செல்லும் இந்த கேபிள் கார் அமைக்க பல இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே மீதமிருக்கும் காடுகளும் அழிவுக்கு உள்ளாகவே வாய்ப்புகள் அதிகம். 

மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் மூலம் பயணம் செய்யும் மக்கள் அனைவரையும் கொடைக்கானல் தாங்குமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். கோடை காலங்களில் வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறும் கொடைக்கானல் நகரம் கேபிள் காரில் வரும் 24000 சுற்றுலா பயணிகளை எப்படி சமாளிக்கும் ? உள்ளூர் மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை மூடச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கொடைக்கானல் நகரின் நிலை என்னவாகும் ?

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களில் பழனி மலைத் தொடரும் ஒன்று. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து இப்போதும் மாலை நேரங்களில் யானைகளை பார்க்க முடியும். அங்கே ஒரு கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. மது அருந்துபவர்கள் அங்கேயே குப்பைகளையும் பாட்டில்களையும் போட்டுவிட்டுத்தான் போவார்கள். கொடைக்கானல் செல்லும் ஆம்னி பேருந்துகளின் ஒலிப்பான்களால் காடே அதிரும். எல்லாவற்றையும் இந்த யானைகள் சகித்துக் கொள்ள வேண்டும். மலைப்பகுதியில் கீழே தான் காடுகள் அதிகம். நடுவில் உள்ள பகுதிகள் பெருமப்பாலும் தோட்டங்கள் தான். அங்கு சென்றால் யானைகள் விரட்டி அடிக்கப்படும். காட்டை விட்டு வெளியே வந்தாலும் விளை நிலங்கள் தான். அங்கேயும் மின்வேலிகள் உண்டு. நெருங்கக் கூட முடியாது. ஒரு குறுகிய காட்டுக்குள் தான் இந்த பேருயிர்கள் தங்கள் எல்லைகளை சுருக்கிக் கொண்டு வாழ வேண்டும். திரும்பிய திசையெல்லாம் மனிதர்கள். இத்தனைக்கும் மனிதர்கள் பரிணாம வளர்ச்சிக்கும் இவை முந்தியவை. இந்த காட்டை உருவாக்கிய மூதாதையர்கள் இந்த யானைகள். இந்த கேபிள் கார்கள் யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையின் நேரடியாகவே குப்பைகளை கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டும் ? 

இது மாதிரியான கேபிள் கார்கள் மற்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதும் உண்மைதான். அங்கே நிலை வேறு. அந்த சூழல் வேறு. அங்கே மக்களின் மன நிலையும் வேறு. இங்கே அப்படியில்லை. ஒரு மரத்தை வெட்ட வேண்டிய இடத்தில நூறு மரங்கள் வெட்டப்படலாம். அதன் பிறகு நீதிமன்றம் செல்வதால் மரங்கள் திரும்ப வரப்போவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சோலைமந்திகள் பழனி மலைத் தொடரில் முற்றிலும் அழிந்துவிட்டன. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மிக மிக மிக சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் மட்டுமே உள்ளது. இருவாச்சி பறவைகளையும் காணவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு புலி இருப்பதாக அறியப்பட்ட போது அது விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்திதான் முதலில் வந்தது.

இதுவரை கொண்டுவந்த வளர்ச்சித்திட்டங்களால் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டேன். இந்த திட்டம் எங்களால் தான் வந்தது என பலரும் பெருமை பேசுகிறார்கள். கேரளாவில் ஒரு யானை வெடிவைத்துக் கொல்லப்பட்ட போது சமூக ஊடகங்கள் பொங்கி எழுந்தன. ஒரு யானைக்கு தீ வைக்கப்பட்ட காணொளி பரவிய போதும் பலரும் கவலை தெரிவித்தார்கள். நாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பின் மறந்து போகவும் ஒவ்வொரு முறையும் இந்த யானைகள் சாக வேண்டுமா ? நீங்களே சொல்லுங்கள் யானைகளா ? கேபிள் காரா ? எது முக்கியம் ?


Oct 14, 2022

தமிழகத்தின் பறவை காப்பிடங்கள் : திரு.ஏ.சண்முகானந்தம் & முனைவர்.சா.செயக்குமார்

இந்த நூலை வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்த நூலை பற்றிய என்ன ஓட்டம் முழுவதும் மாறிவிடுகிறது. காரணம், இந்த நூல், வெறும் பறவை காப்பிடங்களை பற்றிய நூல் மட்டுமல்ல. இது தமிழகத்தின் பறவைகள் பற்றிய ஒரு ஆவணம். பறவைகள் பற்றி எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எழுதப்பட்ட அறிவியல் நூல். பறவையினுடைய உடல் பாகங்கள், அவற்றின் வாழிடம், அவற்றின் வலசை காலங்கள், வலசை வரும் இடங்கள் என மிக விரிவான தளத்திற்கு இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. 


ஒவ்வொரு பறவை காப்பிடத்திற்குமான பெயர் காரணங்கள், அது எப்படி சூழலியலோடு பொருந்திப் போகிறது என்பதற்கான விளக்கங்கள், இன்றைய சூழ்நிலையில் அந்த பறவை காப்பிடங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், பறவைகள் அந்த குறிப்பிட்ட காப்பிடத்திற்கு வருவதற்கான காரணங்கள், அவை எப்போது வலசை வருகின்றன, எங்கிருந்து வருகின்றன, எப்போது திரும்புகின்றன என விரிவாக பேசுகிறது இந்த நூல்.

பறவைகள் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள், பறவைகளுக்கான சரியான தமிழ் பெயர்கள், பெயரில் இருக்கும் சிக்கல்கள் என தமிழகம் சார்ந்த பறவைகள் பற்றிய எல்லா தலைப்புகளையும் ஒரே நூலில் முடிந்த அளவிற்கு கொண்டு வந்துவிட்டதற்காகவே ஆசிரியர்கள் திரு.ஏ.சண்முகானந்தம் மற்றும் முனைவர்.சா.செயக்குமார் இருவரையும் வாழ்த்துகிறேன்.

பறவை காப்பிடங்கள் மட்டுமல்லாது, பறவைகள் அதிகம் வலசை வரக்கூடிய தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இந்த நூல் ஆதரிக்கிறது. அவை பறவை காப்பிடங்களாக மாற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பூர் நஞ்சராயன் குளம் சமீபத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அழகிய வண்ணப்படங்களுடன் கூடிய இந்த நூல் புதிதாக பறவை காணலை நோக்கி திரும்பும் பலருக்கும் உதவியாகவும் இருக்கும். பறவைகளின் வாழிடங்கள் சீரழிந்து வருவதை உரக்க பேசும் இந்த நூல் தமிழ் பசுமை இலக்கியத்தில் முக்கிய வரவாக இருக்கும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிக்கரணை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளை பறவைகளின் நலன் கருதியும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் கருதியும் அரசு கவனத்தில் கொண்டு அந்த பகுதிகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தின் சூழலியலை பார்க்கும் போது எல்லா மாவட்டங்களிலுமே பறவைகள் சரணாலயங்கள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. நீர் நிலைகளை மட்டுமே சார்ந்தில்லாது காடுகள் மற்றும் சம தளத்தில் உள்ள புல்வெளிப்பகுதிகளையும் பறவை காப்பிடம் என்ற அடையாளத்தோடு பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.

காக்கைக்கூடு தளத்தில் இந்த நூலை வாங்கலாம்.

தமிழகத்தின் பறவை காப்பிடங்கள்


Oct 8, 2022

யாருக்கானது பூமி? - விமர்சனம் 6

அன்பு நண்பர் மற்றும் எழுத்தாளர் திரு.ஜி.சிவகுமார் அவர்களின் நீண்ட விமர்சனம். பேரன்பும் நன்றியும் சார். இப்படி ஒரு நீண்ட விமர்சனத்தை வாசிக்கையில் மனம் நெகிழ்கிறது. இந்த நூலை எழுதி முடிக்க எடுத்துக்கொண்ட உழைப்பு அர்த்தமுள்ளதாகிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி சார்.

=======================================




யாருக்கானது பூமி?
சூழலியல் கானுயிர்காப்பு பறவையியல் கட்டுரைகள்
பா.சதீஷ் முத்து கோபால்
காக்கை கூடு வெளியீடு
2014 15 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுச்சூழல் விருது பெற்ற நுல்
பா.சதீஷ் முத்து கோபால், காட்டுயிர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அவதானிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் இவர் பழனியை சேர்ந்தவர். தற்போது மென்பொருள் துறையில் பணி புரிகிறார் இது இவரது இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு.
வனத்தையும் கானுயிர்களையும் பறவைகளையும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல், ஒரு தொலைக்காட்சிச் தொடரைப் பார்ப்பது போல் வெற்றுப் பொழுதுபோக்காக பார்ப்பவர்களின் மத்தியில் பறவைகளையும், கானுயிர்களையும் தேடி அடர்ந்த வனத்திற்குள் பல நாட்கள் பயணம் செய்து, காத்திருந்து, பார்த்திருந்து அவற்றை புகைப்படங்களில் வார்த்தைகளில் பனிரெண்டு கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்
இப்போது கூட ஒரு மலைத் தொடரின் அடிவாரங்களில் பயணம் செய்கையில்,மிக நீண்ட தொலைவிற்கு இருளில் தகதகக்கும் நெருப்பைப் பார்த்திருப்பீர்கள். மனிதனின் அலட்சியத்தாலும் சுயநலத்தாலும் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு வனம் அழிவதை வாசிக்கும்போது மனம் பதறுகிறது.
காவிரி வனப்பகுதி,பழனி மலைத் தொடர்கள், ஸ்ரீரங்கப்பட்டணம், பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், வனவிலங்கு கணக்கெடுப்பிற்காகச் சென்றிருந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோலே வனப் பகுதி,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர்,பத்ரா புலிகள் காப்பக வனப்பகுதி,சத்தியமங்கலம் வனப்பகுதி, சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நகரம் என பறவைகளையும்,கானுயிர்களையும் தேடி அவர் பயணங்கள் செய்வதை அறிகையில் பிரமிப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கிறது..
புலிகள் சரணாலயத்தில் வெகு அருகில் புலியின் பேரோசையைக் கேட்க வாய்த்த அவருக்கு அதைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.விரைவில் கிடைக்கட்டும்.
நத்தைகுத்தி நாரை போல ஒரு பறவையின் குணத்தை வைத்தே அதற்குத் தமிழ்ப் பெயரிடுகிறார்கள்.சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்தால்,அவை உணவைத் தேடி உண்ணும் தன் இயல்பைத் தொலைக்கின்றன.அதோடு பயணிகள் விட்டுச் செல்லும் உணவின் மீதங்களைப் பறவைகள் உண்பதால் அவற்றிற்கும் தீங்கு விளைகிறது. பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்ணும் தேன்சிட்டு அளவிலான பட்டு நெற்றி என்னும் சிறு பறவை மரங்களில் தலைகீக கீழ்நோக்கி நடக்கும் திறமை வாய்ந்தது இப்படி, வனங்கள், பறவைகள்,விலங்குகள் குறித்த தெளிவான நம்பகமான விவரங்கள்,அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய சூழ்நிலையில் வனங்களின், பறவைகளின் விலங்குகளின் அவலநிலை எல்லாவற்றையும் பொருத்தமான சங்க இலக்கியப் பாடல்களோடு விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.குறிப்பாக மழைநீரைத் தேக்கி வைத்து சிற்றோடைகளாக மாற்றித் தரும் சோலைக்காடுகளின் நன்மைகளையும்,அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வாசிக்கும் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
பழங்குடியின மக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறிப்பாக அந்த குழந்தைகளுக்கு தரவேண்டிய தரமான கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசும்போது ஆசிரியர்களும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று சொல்வது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.அதற்கு முதலில் காடு குறித்த தெளிவான புரிதலை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமல்லவா?
நிலத்திலும்,நீரிலும் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய பறவைகள்,கானுயிர்களிலிருந்து அடர்ந்த வனங்களில் மட்டுமே காணக்கூடிய பறவைகள்,கானுயிர்கள் வரை அவற்றின் பெயர்களோடு கூடிய புகைப்படங்கள், அவர்களைப் பார்த்த அனுபவங்கள் எல்லாவற்றையும் விரிவாகத் தந்திருக்கிறார்.
பறவைகளையும் அதிகமாக காணக்கூடிய இடங்களையெல்லாம் பட்டியலிட்டு தருவதோடு, செல்ல வேண்டிய காலம் முதலிய முக்கியத் தகவல்களையும் தருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கும்,பொதுமக்களுக்கும் காடு,கானுயிர்கள்,பறவைகள் குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகிறார்.
அவர் வெறுமனே ஒரு பறவைகள்,கானுயிர்கள் பார்ப்பவர் மட்டுமல்ல,அவற்றைப் பாதுகாப்பதில்,அதன் வழி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சலிப்பின்றி உழைத்தும் வருகிறார்.அதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
அருகில் அமர்ந்து பேசுவது போல் இயல்பான நடையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களும் அவருடன் இணைந்து வனப் பயணங்களை மேற்கொண்டு, பறவைகளை வெகு அருகில் கண்ட இனிய அனுபவத்தைப் பெறுவார்கள்.
சூழலைக் காக்க,காடுகளைக் காக்க,காட்டுயிர்களைக் காக்க,நம் தலைமுறைகளைக் காக்க நாம் சிறிய மாற்றங்களையாவது நமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சதீஸ் முத்து கோபாலின் ஆசை நம் நலனுக்காக நிச்சயம் நிறைவேற வேண்டும்.
யாருக்கானது பூமி?என்கிற கேள்வியோடு நேர்த்தியான வடிவமைப்பில்,அழகிய அட்டைப்படமும் அமைந்த இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள் வாசித்து முடிக்கையில் பூமி யாருக்கானது என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

Oct 2, 2022

Birds of Singapore - Page 6







Oct 1, 2022

Birds of Singapore - Page 5

 












Sep 24, 2022

மதுரை புத்தகத் திருவிழா - 2022

 


Sep 22, 2022

Fort Canning Park [Singapore]

On a cloudy evening, I saw an old woman speaking to a little tree in Fort Canning Park in Singapore. The information board in front of the tree drew my attention, and I began to read it. The lady turned to me and said: "I often come here and speak to this tree. In this place, we had a huge Flame of the Forest tree. When it bloomed the entire area was beautiful. But the tree died in 2020. I used to talk to the tree. As it’s no more, nowadays I'm talking to the offspring". She showed me some old photographs of the tree and she moved away.



Fort Canning Park and Skyscraper Buildings

The Flame of the Forest is native to Madagascar and this particular tree was endorsed as a heritage tree in Singapore. The government of Singapore declares some of the trees as "heritage trees", based on their girth as well as the botanical, social and cultural values. There are heritage trees over a hundred years old, and few of them are native to Singapore. Fort Canning is one of the places to find such heritage trees.

Fort Canning Park is a small hill surrounded by the skyscrapers to the south of Singapore city. One who enters the park can feel the ambience of the rainforest in a few minutes. Though the hill is well known for it’s natural aspect, it has a historical value too. This hill was the centre of the kingdom of Temasek in the 14th century and it became the centre for administration during the British period.

This park was constructed with a fort during the 1850s. When the rebellion broke out in 1857 in India, the Governor General of British territories in India, under the East India Company, was Lord Charles John Canning. In 1958, the East India Company was dissolved and all the British territories, including Singapore, came directly under the British Crown. Lord Charles John Canning was appointed as the first Viceroy of India in 1958. Hence the British Government decided to name the park in Singapore 'Fort Canning'. Today there are hundreds of trees in the park that provide a good habitat for many bird species. To strengthen the spice trade, the British brought cocoa trees to Singapore. I saw a pair of Plaintain Squirrels feeding on the fruit of the trees.

Plaintain Squirrel feeding Cocoa

The Kapok Tree (Ceiba pentandra), native to tropical America, is one of the heritage trees in Fort Canning. The Malay word ‘kapok’ refers to the white fibre in which the seed is embedded. Old trees have large buttresses and the stem is usually covered with stout conical prickles. Another heritage tree well known by appearance is the Rain Tree (Samanea saman), also introduced to Singapore from the tropical Americas. The Rain Tree is called "Pukul Lima" in Malay, meaning 5 o’ clock; the leaflets tend to fold up around that time in the evening. Similarly, the Indian Pitta (Pitta brachyura) is called "Arumanik kuruvi", meaning 6’ o clock bird in Tamil, as it calls around that time in the evening. These names surprised me as they refered to phenomena in other languages.

Rain Tree and Red Jungle fowl

The Red Jungle fowl (Gallus gallus) is one of the common bird species and is found all around the park. They freely roam about, thanks to the local people who don't pose them any threat and is a fine example of wildlife coexisting with humans. Similarly, the Asian Water Monitor (Varanus salvator) and the Clouded Monitors (Varanus nebulosus) are commonly seen in Singapore. I saw an Asian Water Monitor Lizard on a ficus tree. Unlike in urban areas, the Banyan (Ficus benghalensis) trees in this park are well protected, with the aerial roots touching the ground and forming strong woody props. Resident birds, like the Yellow-vented Bulbul (Pycnonotus goiavier), the Javan Myna (Acridotheres javanicus), and the Black-naped Oriole (Oriolus chinensis) are commonly seen in this tree.

Black-naped Oriole - Javan Myna - Yellow-vented Bulbul - (Top to Bottom)

The American tropics contributed two more heritage trees to the Park, the "Madras Thorn" (Pithecellobium dulce) and the "Earpod Tree" (Enterolobium cyclocarpum). The Pinkish pods of "Madras Thorn" are familiar to many Indians, who consume the sweet pulp during the season. The "Earpod Tree" also produces ear-shaped pods with a sweet pulp, but this is mostly eaten by the wild animals and cattle.

Earpod Tree on the left and Madaras Thorn on the right

During a walk I once saw a pair of Collared kingfishers (Todiramphus chloris) feeding their chicks nesting in an arboreal hole. Unlike most Kingfishers, the Collared kingfisher uses the holes in trees for nesting. They are commonly found in the coastal area of Southeast Asia. I also saw an Oriental Pied Hornbill (Anthracoceros albirostris) which also uses the holes for nesting. They coexist well in the urban area and it was really surprising to see them perching in high-rise buildings around the Fort Canning Park. The Park has a mural wall recreated in 14th-century Javanese style. This wall shows the socio-cultural  significance of water from the 14th Century to the 19th Century. The hornbill was also depicted, beautifully carved on the wall, showing the historical and natural importance of the bird.

Javanese Style Wall with Oriental Pied Hornbill Crafted and Oriental Pied Hornbill Perching on Urban Building

Article Published in Leaf Litter Magazine Sep 2022. ©Satheesh Muthu Gopal

Sep 16, 2022

இந்தியா வரும் சிவிங்கப்புலிகள் [African Cheetah]

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிவிங்கப்புலிகள் (African Cheetah) வரவிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் சிறுத்தைகள் (Leopard) வர இருப்பதாக செய்தி வெளியிடுகின்றன. இந்தியாவில் சிறுத்தைகள் இப்போதும் காடுகளில் வாழ்கின்றன. ஆனால் சிவிங்கப்புலிகள் 1948ஆம் ஆண்டு இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோனது. இந்தியாவில் வாழ்ந்தவை ஆசிய சிவிங்கப்புலிகள் (Asian Cheetah). வேட்டையின் காரணமாக அவை முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்டன. இப்போதும் ஆசிய சிவங்கப்புலிகள் ஈரானில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றன. 



தற்போது கொண்டுவரப்படும் ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் மத்திய பிரதேச காடுகளில் விடப்படும். அவை இதுவரை சந்திக்காத நில அமைப்பையும் இரை விலங்குகளையும் சந்திக்கும். எனவே இதில் இருக்கும் சாதக பாதகங்கள் இப்போது தெரியாது. இருப்பினும் ஆசிய சிவங்கப்புலிகளை காப்பாற்ற முனைத்திருந்தால் இந்த கேள்விகள் வராது. ஆசிய சிவங்கப்புலிகளை காப்பாற்றவும் இந்த நிலப்பரப்பு பயனுள்ளதாக இருந்திருக்கும். 



ஆசிய சிவிங்கப்புலிகள் தமிழ்நாட்டிலும் வாழ்ந்து வந்தன. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நிலப்பரப்பில் இந்த உலகின் வேகமாக ஓடும் சிவிங்கப்புலிகள் இனி வாழப்போகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் (Asian Lion) தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டும் வாழ்ந்து வருகிறது. அவற்றில் சிலவற்றை வேறு மாநிலங்களுக்கு இடம் மாற்ற தற்போது வரை குஜராத் அரசு மறுக்கிறது. ஆசிய சிங்கங்களும் அவை ஏற்கனவே வாழ்ந்த நிலப்பரப்பில் தனியாக பிரித்து பாதுகாக்கப்படுவது அவசியம். ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் ஆசிய சிங்கங்களை அழியாமல் காப்பாற்ற முடியும்.

Asiatic Cheetah Specimen in Zürich Zoological Museum


Sep 10, 2022

யானைகளுக்கு ஏன் மதம் பிடிக்கிறது ?

திரு.கோவை சதாசிவம் அவர்கள் எழுதிய "ஆதியில் யானைகள் இருந்தன" என்ற நூலை வாசித்தேன். நூலின் தலைப்பு யானைகளை காக்க வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்துகிறது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள யானைகள் பற்றிய பல குறிப்புகளை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. அதே நேரம் சங்க இலக்கியங்களில் யானைகள் பற்றிய உண்மைக்கு முரணாக சொல்லப்பட்ட கருத்துகளையும் வெளிப்படையாக பேசுகிறது. யானைகள் மீது மனிதர்கள் இதுவரை செய்த வன்முறைகள் யாவும் கொடூரமானவை. போரில் பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட யானைகள், வேட்டைக்காக கொல்லப்பட்ட யானைகள் என நீளும் யானைகளுக்கு எதிராக மனிதர்கள் செய்யும் அட்டூழியம் இன்று வரை தொடர்கிறது. 


யானைகளுக்கு ஏன் மதம் பிடிக்கிறது என்பதை மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். தங்கள் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட வயதுவந்த  ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் தன்னுடைய கண்ணுக்கும் காதுக்கும் நடுவே இருந்து சுரக்கும் மதநீரின் வாசனை மூலமாக பெண் யானைகளுக்கு செய்தி சொல்கிறது. அந்த நேரங்களில் சில ஆண் யானைகள் மிகவும் ஆவேசமாக இருக்கும். இது இயற்கையாக நிகழ்வது. இந்த இயற்கையான நிகழ்வை சங்கிலிகளால் மனிதர்கள் கட்டுப்படுத்த நினைக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யானைக்கு மதம் பிடித்துவிட்டதாக யானைகளின் மீதே பழிபோடுகிறோம். 

இந்த நூலில் யானைகள் பற்றிய இரண்டு சம்பவங்கள் என் மனதை மிகவும் கவர்ந்தன. ஒன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இன்னொன்று ஒரு காடருகே நடந்தது. இந்த இரண்டாவது சம்பவத்தில், யானை ஒன்று ஒரு வீட்டை இடித்துத் தள்ளுகிறது. எல்லோரும் கூச்சலிட யானை இடிப்பதை நிறுத்தவில்லை. தீடிரென ஒரு குழந்தையின் அழு குரலை கேட்ட யானை இடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தையைத் தேடியிருக்கிறது. குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை எனத் தெரிந்ததும் குழந்தையை ஆறுதல்படுத்த முயன்றிருக்கிறது. தும்பிக்கையை ஆட்டிக்காட்டி பிளிறியிருக்கிறது. அந்த குழந்தை நலமாக இருப்பதை அரித்த கொண்ட பின் அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்கிறது. யானைகளுக்கு மற்ற உயிர்களிடத்திலும் அன்பு உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் யானை வருவதை அறியாமல் ஒரு நபர் நின்றுகொண்டிருப்பர். யானை அவரது மிக அருகில் வந்தும் ஒன்றும் செய்யாமல் கடந்துபோவது தெளிவாகத் தெரிந்தது. 

யானைகளை பற்றிய அறிவியல் தகவல்களை அறிந்து கொள்ளவும், சங்க இலக்கிய மேற்கோள்களை தெரிந்து கொள்ளவும் இந்த நூலை அவசியம் வாசிக்கலாம். அந்த திருவனந்தபுர சம்பவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நூலை அவசியம் வாங்கவும். Crownest இணையதளத்தில் கிடைக்கிறது.

https://crownest.in/product/adhiyil-yanaikal-irunthana-kovaisadhasivam/

புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை

நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?