வெம்பு கரி - முனைவர்.ஜி.சிவக்குமார்

யானையை அதிகம் நேசிக்கும் நண்பர் ஜி.சிவகுமார் அவர்களின் சிறுகதை தொகுப்பு "வெம்பு கரி". மிக அருமையான சிறுகதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளின் களம் பழனியை சுற்றியே இருப்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. மிக எளிமையான நடை. மிக நுட்பமான அவதானிப்புகளை வார்தைகளாக்கி அருமையான கதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சாமானிய மனிதனின் எண்ணத்தில் இருந்து எழுதியிருப்பதே கூடுதல் சிறப்பு. 


ஜன்னல் ஓரம் பேருந்தில் இடம் தேடும் ஒருவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதிலும், பேருந்திலிருந்து பொறுப்பற்று குப்பைகளை தூக்கி எரியும் ஒருவனை எச்சரிப்பதிலும் என எல்லா கதைகளிலும் சிறப்பான எழுத்துக்களை கதையின் சுவாரசியம் குறையாமல் கூட்டிச் செல்கிறார். பெரும்பாலான கதைகளில் நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது. 

யானையை அவர் வர்ணிக்கும் இடங்கள் அத்தனை அற்புதமாக இருக்கிறது. யானைக்கும் கதாபாத்திரத்துக்கும் நடக்கும் உரையாடல் இது வரை யாரும் யோசிக்காதது. யானையின் சின்ன சின்ன அசைவுகளையும் நுட்பமாக கவனித்து, எழுத்தில் கொண்டுவந்திருப்பது தனிச் சிறப்பு.

கதைகள் ஏற்படுத்தும் தாக்கமே இந்த நூலின் வெற்றியாக பார்க்கிறேன். நிச்சயம் சிறுகதை வாசகர்கள் எல்லோராலும் வாசிக்கப் படவேண்டிய நூல். பழனியில் இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பது உள்ளூர் மக்கள் அதிகம் பேருக்கு தெரியாது. நிச்சயம் இவர் எழுத்துக்கள் பலரையும் சென்றடைய வேண்டும். மேலும் பல நூல்களை சிவகுமார் அவர்கள் எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்.    

புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை

அழியும் பேருயிர் - யானைகள்


Post a Comment

1 Comments