கலையாத மேகங்கள்  

உருமாறிச் செல்வது போல் 

கடலலைகள் எப்பொழுதும் 

உயர்ந்தெழுந்து தவழ்வது போல் 

ஓராயிரம் சோளக்குருவிகள்

ஒருங்கிணைந்து ஆடும் நடனம் 

இயற்கையின் அற்புதம் 

இன்றுவரை அதிசயம்.