பட்டுப்போன பனைதானே 

வெட்டிவிடலாம் என்றெண்ணி 

இயந்திரத்தின் துணைகொண்டு 

அடியோடு சாய்த்துவிட, 

பனைமரப் பொந்துகளில் 

வாழ்ந்துவந்த பைங்கிளிகள் 

கூடடைய திரும்புகையில் 

எழுப்புமந்த கீச்சொலியை 

மொழிபெயர்க்க தேவையில்லை