கரிசல்காட்டின் உயிர்வேலியில் 

கள்ளிப்பழம் பறிக்கும் 

கிழவியின் கண்களுக்கு

ஒற்றை பழம் மட்டும்

மாயமாவதும்,

கிளைமாறித் தெரிவதும்

வியப்பானதன்று.

அது கள்ளிக்குயிலின்

அலகாக இருக்கலாம். 

அழகாகவும் இருக்கலாம். 

Photograph by Sundar R N Samy