Jun 13, 2011

வீரத் துறவி விவேகானந்தர் : திரு.பசுமை குமார்



விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய "வீரத் துறவி விவேகானந்தர்" என்ற நூலை படித்தேன். விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்புகளோடு, அவர் போதித்த தத்துவங்களையும் ஆங்காங்கே சிதறவிட்டிருக்கிறது இந்த நூல்.


உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்தியாவை பற்றிய புதிய பிம்பத்தை ஏற்படுத்திய விவேகானந்தர், இந்தியாவின் முக்கிய தேவை மதம் அல்ல. கல்வியே என்று வலியுறுத்துகிறார். ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்பதை எல்லா சமயங்களிலும் உறுதிபடச் சொன்னவர்.


சிகாகோ சர்வ சமய மாநாட்டிற்கு சென்ற போதும் கூட, பலருடைய உதவியினால் தான் சென்றிருக்கிறார். அதன் பிறகு இந்தியா திரும்பியதும், பின் ஒவ்வொரு ஊராக சென்ற மக்களை சந்தித்து, சொற்பொழிவாற்றி பலரையும் கிளர்ந்தெழச் செய்தவர் விவேகானந்தர்.


 கன்னியாகுமரி வந்த போது, கடலின் நடுவே இருக்கும் பாறையில் தவம் செய்ய விரும்பி, படகோட்டிகளை உதவிக்கு அழைத்த போது, கையில் பணம் இல்லாததால் யாரும்  அவரை கொண்டுபோய் விட முன்வரவில்லை. பின் நீந்தியே பாறையை அடைந்தார். இன்று அந்த பாறைக்கு செல்வதற்கு, மக்கள் கட்டணம் கட்டி வரிசையில் காத்திருக்கிறார்கள்.




No comments:

Post a Comment

Would you like to follow ?