லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி இணைந்து வழங்கிய குறளிசைக்காவியம் - எட்டாவது பாகம் சிங்கப்பூரில் வெளியானது. திருக்குறளின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் இவர்களையும், இவர்கள் குடும்பத்தையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். சுமார் ஆயிரம் பாடகர்கள் இணைந்து உருவாக்கும் இந்த இசைத் தொகுப்பு எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும். இது ஒரு மிகப்பெரிய முயற்சி. தங்களுடைய பதின் பருவத்தை, திருக்குறளுக்காகவே அர்பணித்திருக்கிற இவர்களை வாழ்த்துவோம். குறளோடு அதன் பொருளும் என கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது, இந்த இசைத் தொகுப்பு. இதுவரை ஏழு நாடுகளில், ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டு தற்போது எட்டாவது பாகம் சிங்கப்பூரில் வெளியாகியுள்ளது. இந்த இசைத் தொகுப்பில் பல்வேறு நாட்டில் இருந்தும் பாடகர்களை பாடச் செய்திருப்பதும் நல்ல முயற்சி.
நிகழவில் திரு.ஆர். பாலகிருஷ்ணன் I.A.S அவர்கள் ஆற்றிய சிறப்புரை அருமையாக இருந்தது. அவர் பேசிய முப்பது நிமிடங்களும் அரங்கம் நிறைந்த கைதட்டல். திருக்குறளை தன் வாழ்வோடு தொடர்புபடுத்தி பேசியது அருமை. திருக்குறளை தமிழில் நேரடியாக படிப்பது நாம் பெற்ற வரம் என்றார். எத்தனை உண்மை!
நிகழ்ச்சியை திரு இறை.மதியழகன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.




0 Comments