Feb 25, 2023

காட்டுக்கோழி [Gray Jungle-fowl]

கடமானா காட்டுமாடா

எனப் புரியாமல் 

உறைந்து நிற்கும் 

ஒரு கணத்தில்,

உதிர்ந்திருக்கும் சருகுகளைக் 

களைத்தபடி 

புழுக்களைக் கொத்தித்தின்னும் 

காட்டுக்கோழி,

சட்டென உற்றுநோக்கி

சொல்லாமல் சொல்கிறது 

காடென்றால் அப்படிதான்.


7 comments:

  1. Arumaiyana varigal.. Thodarnthu ezhuthungal 😊

    ReplyDelete
  2. இனியமையான சொற்களால் அருமையான வரிகளில் இயக்கையின் அழகினை வர்ணித்து நமக்கு இந்த குழுமத்தின் வாயிலாக தந்துக்கொண்டிருக்கும் நண்பன், எழுத்தாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு மணமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க. பெயர் குறிப்பிடவில்லையே....

      Delete