சூடிய பூ சூடற்க : திரு.நாஞ்சில் நாடன்

திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு வாசித்தேன். சில கதைகள் கட்டுரை போலத்தான் இருக்கிறது. கதையென்று நினைத்துப் பார்த்தல் கதையாக தோன்றும். ஒரு வகையில் இது வித்தை போலத்தானோ எனத் தோன்றுகிறது. கதையின் கருப்பொருள் பற்றிய செய்திகளை அவ்வப்போது பட்டியலிடுகிறார். இந்த பட்டியல் இரண்டு செய்திகளை புரிய வைக்கிறது. ஒன்று, நாம் பார்த்தும் கவனிக்காமல் போன பாதையில் இத்தனையும் இருந்தது என எடுத்துச் சொல்கிறது. மற்றொன்று திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இருக்கும் விஷய ஞானம். அறிவு சார்ந்த பல செய்திகளை சிறுகதையில் புகுத்தியிருக்கிறார். எதையெல்லாம் இவர் பட்டியலிடுகிறார் என்று எழுதினால் அதுவே பெரிய பட்டியலாகிவிடும்.

கும்பமுனி என்னும் கதா பத்திரத்தின் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறார், சிறுகதை என்ற போர்வையில். ஒரு சிலருக்காவது உறைத்திருக்குமோ என்னவோ? சீப்பு இலவசமாக கிடைத்தாலும், முண்டியடித்துக்கொண்டு வாங்க செல்பவர்கள் என்று மக்களை குறை சொல்லும் இடத்தில், இவரின் பாரபட்சமற்ற எழுத்துக்கள், சாட்டையடி கொடுக்கிறது.

மேலதிகாரிக்கு குப்பை தொட்டியில் பிஸ்கட் எடுத்துக்கொடுப்பதும், கேட்பாரற்று இருக்கும் தியாகி எம்.ஜி.இராமச்சந்திரன் சிலையை கருப்பொருள் ஆக்கியிருப்பதும், மனதை பிசைகிறது.

காடுகளில் இருக்கும் மரங்களை பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார்: "இறைவன் உறையும் பெரு மரத்தண்டுகள்". இந்த புத்தகத்தில் என்னை அதிகம் கவர்ந்த வரிகள் இவை தான். இதற்காகவே சாகித்ய அகாதமி கொடுக்கலாம்.

Post a Comment

0 Comments