தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயம்

காட்டுயிர் ஆர்வலர்கள் பலராலும் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்ட தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட விலங்குகளில் தேவங்கும் ஒன்று. மூட நம்பிக்கைகளாலும் காடுகள் அழிப்பாலும் இந்த தேவாங்கு அதிக அளவில் அழிந்துவிட்டது. அய்யலூர் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை ஓரளவிற்கு இருந்ததால் அந்த வனப்பகுதி தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற உள்ளது. தேவாங்கு என்ற உயிரினம் தமிழ்நாட்டில் இருப்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் உள்ளது. மற்ற விலங்குகளில் இருந்து வேறுபட்டு காணப்படும் இந்த விலங்கை இனி பலரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த விலங்கு பற்றிய விபரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பள்ளியிலேயே மாணவர்கள் தெரிந்துகொள்ள வழி ஏற்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் தேவாங்குகளை பாதுகாக்க உதவும். 




Post a Comment

2 Comments