புயல் ஓய்ந்த காலை பொழுதில்
மாநகரத்துச் சாலையொன்றில்
பறந்து செல்லும்
வண்ணத்துப்பூச்சி
நேரலையில் சொல்லாத
செய்தியொன்றை
சொல்லிச் செல்கிறது.
பெருநகரத்தின் வீதியொன்றில்
மீதமிருக்கும் ஒற்றை மரத்தில்
தனித்திருக்கிறது
ஊதா நிறத் தேன் சிட்டு.
தீபாவளிக்கு பிறகான நாள் ஒன்றில்
தனித்திருக்கிறது மரம்.