Mar 21, 2011

சிட்டுக்குருவிகள் தினம்

சிட்டுக்குருவிகள் தினம் நல்ல படியாக நடந்து முடிந்தது. வெற்றிகரமாக முடிந்ததா என்பது, எத்தனை பேர் தொடர்ந்து சிட்டுக் குருவிகளின் பாதுகப்பிற்க்காக முயற்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.  மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்களை விடவும் பள்ளி மாணவர்களே அதிகம் பங்கேற்றனர். பல முறை விவசாயிகளை வற்புறுத்தியும் யாரும் அக்கறை காட்டவில்லை.

நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்வது இதைத்தான்:

தானியங்களை உணவாக கொண்டுங்கள்

அவற்றின் இருப்பிடதிற்க்காக சிறிய கூடுகளை கட்டிக் கொடுங்கள்.

தண்ணீர் வையுங்கள்.

பாரம்பரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் புழு பூச்சிகளை சிட்டுக் குருவிகளுக்கு உணவாக்கிக் கொள்ள வழி செய்யுங்கள்.

பூச்சிகொல்லி மற்றும் ரசாயன உரங்களை தவிர்த்திடுங்கள்.




இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற உதவியாக இருந்த அக்ஷ்யா பள்ளியின் (பழனி) முதல்வர் திரு.சந்திர சேகரன் அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.



 தொடர்ந்து செயல்படுவோம் இணைந்திருங்கள்....!!!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=209759


No comments:

Post a Comment

Would you like to follow ?