இயற்கை கொஞ்சம் புரண்டு படுத்தது

நேற்று மீண்டும் ஒரு முறை இயற்கை புரண்டு படுத்திருக்கிறது. இயற்கையில் எப்போதும் நடக்கிற மாற்றம் தான் இது என்று நாம் சாதரணமாக எடுத்துக்கொள்கிற மனநிலையில் இல்லை. உண்மையில் இது சாதாரண மாற்றம் தான்.

எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, சமீப காலங்களில் ஏற்படும் இயற்க்கை மாற்றங்கள் (இயற்க்கை சீரழிவுகள் என்று சொல்ல  விரும்பவில்லை) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துவதற்க்கு இயற்கையை நாம் அதிகமாக ஆக்கிரமித்து விட்டதே காரணம். புற்றீசல் போல கட்டிடங்களை அருகருகே கட்டி நகரங்களை நெருக்கி பிழிகிறோம். பின் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மிகபெரிய அழிவை நமக்கு ஏற்படுத்துகிறது.



இயற்கையில் இருந்து நாம் விலகி விட்டதன் காரணமாக இயற்கையை நாம் உணர வாய்ப்பில்லாமல் போனது. இயற்கையில் அதிர்வுகளை நாம் அறிந்து கொள்வதில்லை. ஆனால் இயற்கையோடு எப்போதும், ஒட்டிகொண்டிருக்கும் பறவைகளும் விலங்குகளும் நடக்க போகும் ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. எனவே அவை எதுவும் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.  பறவைகளை போல நம்மால் இனி வாழ முடியாது.

கொஞ்சம் கசப்பான உண்மை என்னவென்றால், நில நடுக்கம் எப்போதுமே யாரையும் பாதிப்பதில்லை. நிலத்தில் நாம் கட்டியிருக்கும் கட்டிடங்கள் தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Post a Comment

0 Comments