பழனி மலைத் தொடரில் 

பனி பொழியும் வைகறையில் 

மேல் மலையின் சோலைக்காட்டில் 

மிதந்து வரும் பூங்காற்றில் 

உலகிற் சிறந்த கருவிகளால் 

இசைக்க முடியா இன்னிசையை 

உள்ளம் உருக பாடிவிட்டு 

சிட்டாய் மறையும் சோலைக்குருவி...!!