நான் பார்க்க விரும்பும்
பறவைகளின் பட்டியலை தயாரிக்கிறேன்.
அவற்றில் சில அற்றுப் போனதாக அறிகிறேன்.
சில அச்சுறு நிலையில் இருப்பதாகவும்
சில அற்றுப்பெற்றிருக்கலாம் எனவும்
அறிஞர்கள் சொல்கிறார்கள்.
நான் மீண்டும் ஒரு முறை என் விருப்பப் பட்டியலை
தயார் செய்கிறேன், அற்றுப் போன பறவைகளின்
பெயர்களை நீக்கி.
இம்முறையும் சொல்கிறார்கள்
அவற்றுள் சில
அற்றுப் போயினவென்று.
தோழர்களே,
நம்புங்கள்.
என் மீது
தவறேதும் இல்லை.
Ungal kavithaigalai Padikum pothu manathirku yetho oru puthunarvu kidaikarthu
ReplyDeleteமிக்க நன்றி ராஜ்
Delete