கனவில் வரும் பெரும்பூனை


கனவில் வரும் பெரும்பூனையை
படமெடுக்க முயல்கிறேன்.

பெரும்பூனையின் கூரிய பற்கள் என்னை 
சிறிதும் அச்சுறுத்தவில்லை.

நான் கனவில் இருக்கிறேன் என்பதனை
கனவிலேயே அறிவேன்.

பெரும்பூனைகள் கனவில் வருவது
புதிதல்ல எனக்கு.

மரத்தை கீறும் அதன் கூரிய நகங்களை
ரசிக்கிறேன்.

காயம் ஏதுமின்றி குட்டியை கவ்வும்
தாய்மையில் உறைகிறேன்.

கனவில் வரும் பெரும்பூனைகள் பெரும்பாலும்
புலியாகவோ அல்லது சிறுத்தையாகவோ இருக்கலாம்.

சில நேரங்களில் அது 
பொகையனாகவும் இருக்கலாம்.



மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Post a Comment

0 Comments