விருது..!!



தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம், இந்த ஆண்டின் சிறந்த புத்தகங்களாக (2014-15) பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அகநாழிகை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட, நான் எழுதிய "யாருக்கானது பூமி" நூல், சிறந்த சுற்றுச் சூழல் நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நான் பெரும் முதல் விருது இது. தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்திற்கும், தேர்வுக்குழு உறுப்பினர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ச.தமிழ்செல்வன், ப.திருமாவேலன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நூலை வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும், பொன் வாசுதேவன் அவர்களுக்கும், ஆதரவு அளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

இந்த நூலை எனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் மட்டுமே எழுதினேன். இந்த நூலை எழுதி முடிக்க எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. காடுகளை நோக்கிய என் பயணங்களின் வாயிலாக, நான் பெற்ற அனுபவத்தின் மூலமாக, காட்டுயிர் பேணலின் அவசியத்தை வலியுறுத்தி இந்த நூலை கட்டுரை வடிவில் எழுதினேன். சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் செயல்பட வேண்டும் எனவும் இந்த விருது என்னை ஊக்கப்படுத்துகிறது. 

இந்த நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருடன் என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த நூலின் பெரும்பகுதியை என் திருமணதிற்கு பிறகு தான் எழுதினேன். இந்த நூலை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட நேரங்கள் என்னுடையது அல்ல. என் மனைவியுடையது. நன்றியால் நேரத்தை திருப்பித்தர முடியாது. எனவே, தொடர்ந்து எழுத, என்னை அனுமதித்த என் மனைவிக்கு இந்த விருதினை சமர்பிக்கிறேன். 



தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புத்தகங்கள்:
----------------------------------------------------
1. சிறந்த கவிதை நூல்
அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகம்
2. சிறந்த நாவல்
ஆங்காரம் - ஏக்நாத்
டிஸ்கவரி புக்ஸ் வெளியீடு
3. சிறந்த சிறுகதை நூல்
மரணத்தில் மிதக்கும் சொற்கள் - எஸ்.அர்ஷியா
புலம் வெளியீடு
4. சிறந்த கட்டுரைத் தொகுப்பு
நான் வடசென்னைக்காரன்- பாக்கியம் சங்கர்
பாவைமதி பதிப்பகம்
5. சிறந்த வரலாற்று நூல்
ஊரடங்கு உத்தரவு - பி என் எஸ் பாண்டியன்
6. சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
தமிழ்நாட்டு வரலாறு - பேரா.கே.ராஜய்யன்
மொழியாக்கம்: சா.தேவதாஸ்
எதிர் வெளியீடு
7. சிறந்த கல்வி நூல்
என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா - சா.மாடசாமி
புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு
8. சிறந்த சுற்றுசூழல் நூல்
யாருக்கானது பூமி - சதீஸ் முத்து கோபால்
அகநாழிகை வெளியீடு
9. சிறந்த பெண்ணியம் நூல்
பேசாத பேச்செல்லாம் - ப்ரியா தம்பி
10. சிறந்த சிறுவர் இலக்கிய நூல்
யானை சவாரி - பாவண்ணன்
புக்ஸ் பார் சில்ட்ரன்
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....!! 

Post a Comment

2 Comments

  1. இவன் மணிவண்ணன்January 13, 2016 at 2:37 PM

    விருதுக் கிடைத்ததற்கு மிக்க மகழ்ச்சி அடைகிறேன்......

    மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.....

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சதீஸ்!!

    ReplyDelete