சிட்டுக் குருவிகளின் மறுமலர்ச்சிக்கான செயல்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மேலும் சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது.



  • பழனி, ஒட்டன்சத்திரம், பூம்பாறை மற்றும் கொடைக்கானல் நகரங்களில் சிட்டுக் குருவிகள் அதிகம் உள்ள இடங்கள் பதிவு செய்யப்படும்.

  • மேலும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை பொருத்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படும்.

  • புவியிடங்காட்டி (Global Positioning System : GPS) மூலம் இந்த இடங்கள் பதிவு செய்யப்படும்.

  • மேலும் சில கூடு பெட்டிகள் வழங்கப்படும். பெற முடியாதவர்கள் மண் கலயங்களை பயன்படுத்தலாம்.

  • ஒவ்வொரு இடத்தில் பொருத்தப்படும் கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்களுக்கு ஒரு "எண்" வழங்கப்படும்.

  • கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்படும் வீட்டின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து தானியங்கள் வைக்கவும் தண்ணீர் வைக்கவும் வலியுறுத்தப்படும்.

  • சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை கண்காணித்து பதிவு செய்வதற்காக "பதிவுத் தாள்" (Data Sheet) வழங்கப்படும்.

  • வாரம் ஒரு முறை தன்னார்வலர்கள், கூடு பெட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும்.  

  • மாதம் ஒரு முறை இதற்கான கலந்தாய்வு நடைபெறும்.  

  • இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கை பெருகுவது கண்காணிக்கப்படும்.

மேலும் இதை நடைமுறைபடுத்த தன்னர்வலர்களும் தேவைப்படுகிறார்கள்.


உங்கள் ஊரில் இருந்தபடியே, உங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்ய முடியும். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே.





தொடர்புக்கு: +91-9742128975
satheesh.balu.m@gmail.com