மஹாபாரதம் :திரு. ராஜாஜி




ராஜாஜி எழுதிய "மஹாபாரதம்" வாசித்தேன். குருக்ஷேத்திர போரில் நடந்த யுத்த முறைகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் எழுதப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்த பின்னரும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பது, ஒரு எழுத்தாளரின் மிகச் சிறந்த திறமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.


மஹாபாரதத்தின் எண்ணற்ற கதாப்பதிரங்களின் வழியாக சொல்லப்படும் கிளைக்கதைகள் யாவும் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் கடைசி வருடத்தை வேடமிட்டு, விராட ராஜனிடம் வேலைசெய்து காலம் நகர்த்தும் போது, விராடனின் சேனாதிபதி கீசகன், பாஞ்சாலியை அடைய நினைத்து பின் பீமனால் கொல்லப்பட்டான். இந்த கீசகன் தான் பழனி அருகே இருக்கும் கீரனூரை ஆண்டான் என்பது பற்றி செய்தி இல்லை. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.


சிகண்டி பீஷ்மரின் மேல் தொடுத்த அம்புகள் தொடங்கி இறுதியாக பீமன் துரியோதனனின் தொடையை கிழித்தது வரை எதுவும் யுத்த தர்ம முறைகளின்படி நடக்கவில்லை. கர்ணன் தேர் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட போது வீழ்த்தப்பட்டான். ஜகத்ரஜன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது கண்ணன் இருளை உண்டாக்கி ஏமாற்றினான். பூரிசிரவசு கை வெட்டப்பட்டதும், சாத்யகி பூரிசிரவசை கொன்றதும், யுதிஷ்டிரன் துரோணரை கொன்றதும், அதற்காக அசுவத்தாமன் இறந்துவிட்டதாக சொன்ன பொய் யாவும் யுத்த விதிகளுக்கு முரணானதே.


துரியோதனனும் சகுனியும், யுதிஷ்டிரனை அழைத்து பகடையாடி தோற்கடித்து, வனவாசம் அனுப்பி, செய்த அத்தனை துரோகங்களுக்கும் பழி தீர்க்கப்பட்ட யுத்தத்தில், தருமம் தவறுதல் பிழை இல்லையா? அந்த பிழை தான் போரின் வெற்றிக்குப் பிறகும் யுதிஷ்டிரனை நிம்மதி இழக்கச் செய்கிறது. குற்ற உணர்ச்சியற்ற வாழ்க்கையே மேலானது என்பதை தான் மகாபாரதமும் உணர்த்துகிறது என நினைக்கிறேன்.



Post a Comment

6 Comments

  1. apa sari thavaru nu edhuvume illaiya ulagathula ...

    ReplyDelete
  2. In Mahabharatha, Keesakan Who was problematic to Draupathi was killed by Bheema in this place. Reffering to killing ("konra-Idam") , this place later became Kundadam. Kundadam- Kalabhairava Vaduganathar is considered very sacred as equal to Kasi-Kalabhairavar.
    Another Interesting fact is (which also refers to kundadam) when the Pandavas were in exile into the forests, they ventured out into the country in disguise. They were travelling near the place called Dharapuram, and one of the Dhuryodhana's men identified the Pandavas and went on to inform Dhuryodhana.
    The place where the Pandavas is called Kandidam [Kanda (Found) + Idam (Place)], which later got transformed and now called as Kundadam.

    ReplyDelete
  3. Very Nice post Satheesh.. Interesting to know..

    ReplyDelete