சுற்றித் திரியட்டும் சிங்கங்கள்

ஆசியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் அழிந்துவிட்ட ஆசிய சிங்கங்கள் தற்சமயம் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கிறது. சுமார் 1400 ச.கி.மீ பரப்பளவுள்ள இந்த தேசிய வன விலங்கு பூங்காவில், சிங்கங்கள் மட்டும் அல்லாது சிறுத்தை புலி, கழுதை புலி, மற்றும் பல விலங்குகள், பறவை இனங்கள் வாழ்கின்றன.



குஜராத் அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றிற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவில் 411 சிங்கங்கள் கிர் காடுகளில் உள்ளதாக தெரிகிறது. குழுக்களாக வாழும் சிங்கங்கள் தங்கள் குழுவுக்கென்று ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து வாழும். இடப்பற்றாக்குறை காரணமாக சில சமயம் அவை காடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவதுண்டு. எனவே, சிங்கங்கள் சிலவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே எழுந்துள்ளது.



மத்திய பிரதேச மாநிலத்தில், ஏற்கனவே சிங்கங்கள் வாழ்ந்து அழிந்து போன பகுதியான பல்பூர்-குனோ வனப்பகுதிக்கு சில சிங்கங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜாரத் முதல்வர் நரேந்திர மோடி, இதற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதால் அவற்றை இடம் மாற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஒரு வனம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவற்றில் சில ஊன் உண்ணிகள் தலைமையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் விலங்குகள் தொடர்ந்து அந்த வனப்பகுதியில் வாழ முடியும் என்றால். அந்த வனம் எல்லா உயிரினங்களுக்கும் ஏற்புடையதாக விளங்கும், எனவே வனமும் அழியாமல் பாதுகாக்கப்படும்.



தென் ஆப்ரிக்காவில் இருந்து சிறுத்தைகளை கொண்டுவர முடியும் என்றால், பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து சிங்கங்களை கொண்டு வர முடியாதா? கடந்த பத்து ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் இந்த விஷயம், இன்று  வரை காலம் தாழ்த்தப்பட்டு முடிவு காணப்பட முடியாத சூழ்நிலையில் உள்ளது.  சிங்கங்களை இடமாற்றம் செய்வதில் உறுதியாக இருக்கிறார் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சர் திரு.ஜெய் ராம் ரமேஷ். மோடி ஒத்துழைத்தல், மத்திய பிரதேசத்தில் சிங்கங்கள் சுற்றித் திரியும்.



Post a Comment

0 Comments