ஓட்டளிப்போம்

இன்னும் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தலில் நான் ஒருவன் போய் போடுகிற ஓட்டால், இந்த சமூகம் மாறிவிடுமா என்பதே நம் சமூகத்தின் பலரது கேள்வியாக இருக்கிறது. இன்றும் மக்களுக்கு முறையாக ஒட்டு உரிமை இல்லாத எத்தனையோ நாடுகள் உள்ளன. மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


நமக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வைப்பை பயன்படுத்தி சரியான தலைமையை தேர்ந்தடுக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நம் கடமையை நாம் சரியாக செய்திருந்தால், 72 வயதில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இனிமேலாவது நம் கடமையை தொடர்ந்து செய்வோம். ஓட்டளிப்போம்.

உங்கள் ஊரில் யார் வேட்ப்பாளர்கள், என்ன சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

http://www.elections.tn.gov.in/Form7A2011.htm


Post a Comment

0 Comments