தபூ சங்கர் எழுதிய "கண் மையால் எழுதிய கவிதைகள்"

எப்போதாவது அரிதாகவே ஒரு சிறுகதையோ, கட்டுரையோ நம்மை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைக்கும். இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான தபூ சங்கர் எழுதிய "கண் மையால் எழுதிய கவிதைகள்" என்ற சிறுகதை என்னை அப்படி வாசிக்கச் செய்தது. தபூ சங்கரிடம் பிடித்த விஷயமே அவருடைய கதையில், எந்த கசப்புகளுக்கும் இடம் இருக்காது. இந்த சிறுகதையும் அப்படித்தான் இருந்தது. இதை படிக்கும்போதே புத்தகத்தில் இருந்து காதல் வழிந்து ஓடுகிறது.


காதல், தபூ சங்கரை எழுத செய்கிறதா அல்லது இவரது எழுத்து மூலமாக காதல் இன்றும் உயிர்ப்போடு இருகிறதா என தெரியவில்லை. இவரின் கதைகளில் மட்டும் தான் ரோஜா பேசுகிறது, நிலா பேசுகிறது, சமயங்களில் சாமியும் பேசுகிறது. ஆனால் எதையும் மறுப்பதற்கில்லை. இப்படியே இவர் எழுதிக்கொண்டிருந்தால் காதலிக்கு சொல்லப்படும் உவமை பொருள் யாவும் பேச தொடங்கிவிடும் என்று தான் தோன்றுகிறது.

Post a Comment

1 Comments

  1. http://raajeshashok.wordpress.com/2011/06/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/

    ReplyDelete