Nov 28, 2022

இருவாச்சி காவியம்

பறவைகளைப் பார்க்கத் தொடங்கிய பிறகு இருவாச்சியை பார்க்க வேண்டும் என்பது நெடு நாள் ஆசையாக இருந்தது. பொதுவாக தமிழ் நாட்டில் காணப்படும்  நான்கு வகை இருவாச்சிகளில் எழிலார்ந்த இருவாட்சி "பெரிய இருவாட்சி" (Great Hornbill) தான். எங்கேயாவது ஒரு காட்டில் பார்த்துவிட மாட்டோமா என்ற தேடல் இருந்துகொண்டே இருந்தது. ஒருமுறை என்னுடைய நண்பர் வால்பாறையில் அந்த பறவை இருக்கும் இடத்தை கூறினார். அவர் சொன்ன அந்த குறிப்பிட்ட மரத்தில் அதை நிச்சயம் பார்க்கலாம் எனத் தெரிந்துகொண்ட போது ஆர்வம் அதிகமானது. பழனியில் இருந்து இருவாச்சியைக் காண வால்பாறை கிளம்பினேன். 



கிட்டத்தட்ட 100 கி.மீ தூரப் பயணத்தில் இருவாச்சி பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது. சரியான அடையாளங்களை குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அதன்படி அவர் சொன்ன அந்த மரத்தை அடையாளம் கண்டுகொண்டேன். அந்த மரத்தில் இருந்து ஒரு 100மீ தூரம் தள்ளி நின்று, அந்த மரத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். வேறு எந்த பறவைகளின் மீதும் என் எண்ணம் திரும்பவில்லை. எப்படியும் இருவாச்சியை பார்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் என்னால் அவற்றை பார்க்க முடியவில்லை.

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது எனக்கு நேர் எதிரில் தரையில் ஏதோ இருப்பதை அறிந்து உற்று நோக்கினேன். அது கேளையாடு. இவ்வளவு நேரமாக நான் அங்கேயே இருந்தும் அந்த மானை கவனிக்கவே இல்லை. அது எப்போது வந்தது? நான் வரும் போது அங்கே தான் இருந்ததா? என கேள்விகள் மேலெழும்பின. ஆனால் அந்த மான் என்னை கவனித்துக் கொண்டுதான் இருந்திருக்கும். ஒருவேளை இருவாச்சியும் அப்படித்தான் எங்கேயாவது இருக்கிறதா? என்னை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறதா? என்னால் தான் பார்க்க முடியவில்லையா என கேள்விகள் என்னை துரத்தின. இன்னும் தீவிரமாகத் தேடினேன். முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருந்தேன்.

மரப்பொந்துகளில் கூடமைக்கும் இருவாச்சி அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை பெண் பறவை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும். பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கை முறைதான் இந்தப் பறவையினத்தை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இருவாச்சியின் எச்சங்களால் காடு வளர்கிறது. இருவாச்சி விதைப் பரவல் செய்வதில் முக்கிய பறவையாக விளங்குகிறது. 

நான் இருவாச்சியை தேடிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில் சோர்வே மிஞ்சியது. இன்றைய தினம் அதை பார்க்க முடியாதோ என்ற எண்ணம் மேலோங்கியபோது, நான் பார்த்துக் கொண்டிருந்த மரத்தின் கிளையில் அழகாக வந்தமர்ந்து இருவாச்சி. தான் கொண்டு வந்திருந்த உணவை பொந்தில் இருந்த பறவைக்கு ஊட்டியது. பொதுவாகவே கூடுகளை படம் எடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியோடு இருப்பேன். ஏனென்றால் பறவையின் கூடுகளை படம் எடுக்கும் போது அதில் இருக்கும் குஞ்சுகளோ, அதன் பெற்றோர்களோ அச்சப்பட வாய்ப்புண்டு. மேலும் கூடுகளை படம் எடுப்பவர்களை இது ஊக்குவிக்கும். படம் எடுப்பவர்களால் கூடு களையவும் வாய்ப்புண்டு.

ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்த பறவையோ இருவாச்சி. இனி இவற்றை எப்போது காண்பேன் எனத் தெரியாது. என் கண் முன்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தது. ஒரே ஒரு படம் மட்டும் எடுக்கலாமா என்ற சிந்தனை ஒரு பக்கம் உதித்தாலும், கூடுகளை படம் எடுக்க வேண்டாம் என்ற என் உறுதியில் இருந்து பின்வாங்க முடியவில்லை. நான் என் கேமிராவை உள்ள வைத்துவிட்டு அதை பார்த்துக் கொண்டே இருந்தேன். இருள் கவியத் தொடங்கியதும் அங்கிருந்து கிளம்பினேன். இமயத்தில் இருந்து வலசை வந்த சாம்பல் வாலாட்டிக் குருவி சாலையில் வந்து அமர்ந்தது.

Nov 23, 2022

Melodies of Bombay Shola

Shola forest is endemic to the Western Ghats and is one of the most unique ecosystems present in our country. The name Shola was given by the Britishers which originates from the Tamil word Solai. The Bombay Shola got its name because Colonel Partridge of the then Bombay (now Mumbai) Regiment of the Indian Army had a cottage there. Bombay Shola had natural grasslands that are close to Kodaikanal. Today the grasslands are encroached by urban settlements and monoculture of Eucalyptus trees. Even though 85% of the grasslands are encroached by Pine, Eucalyptus, and Acacia trees in the upper hills, a few sholas are still thriving in some places. 




Bombay Shola is one of the most vulnerable forests surrounded by resorts, roads and markets. However, despite these disturbances, the Shola provides shelter for myriad birds’ species and a few mammal species like Indian Gaur Bos gaurus, Malabar Giant Squirrel Ratufa indica and Indian Giant Flying Squirrel Petaurista philippensis. Probably two centuries before this place would have been a better habitat for Sambar Deer Rusa unicolor, Smooth-coated Otter Lutrogale perspicillata, Indian Elephant Elephas maximus indicus etc. Due to the degradation of grasslands, the Nilgiri Pipit Anthus nilghiriensis lost its habitat in these areas and are now in a precarious state. But still, the dense shola is a good habitat for the endemic birds such as the Palani Chilappan (Palani Laughing Thrush) Montecincla fairbanki and White-bellied Sholakili Sholicola albiventris


I have been visiting Shola since 2010. During my initial visits, I witnessed some of the common birds seen in the sholas such as the Grey-headed Canary-flycatcher Culicicapa ceylonensis, Black-and-orange flycatcher Ficedula nigrorufa, Indian Blackbird Turdus simillimus, and Palani Chilappan Montecincla fairbanki etc. As a bird enthusiast, I document the bird sightings every time I visit Shola and most of the species sighted are endemic to the Ghats. Whenever I stay overnight, I look forward to waking up to the calls of the Shola Avifauna the next morning. Out of all the birds, the call of White-bellied Sholakili Sholicola albiventris is very unique and rhythmic. During the early morning hours when the shola forest is silent due to the absence of man-made noises such as loudspeakers, horns etc., the call of White-bellied Sholakili fills the air with musical notes.



The Palani Chilappan Montecincla fairbanki is a gregarious bird that can be found in the montane grasslands and sholas. I noted an interesting behavior of the birds popping out and hiding back in the bushes as if playing a game of hide-n-seek. The continuous call of “pe-kee-ke” helps to identify these birds. Palani Chilappan is purely dependent on the montane grasslands and sholas for their habitat.

Black and Orange Flycatcher Ficedula nigrorufa creates beautiful notes which are shorter but apparently rhythmic and metallic. The upper shola road helps to get the broader view of the canopy of Bombay shola where the Nilgiri Flycatcher Eumyias albicaudatus can be well sighted. Another tiny endemic bird of Western Ghats, the Nilgiri Flowerpecker Dicaeum concolor, is common here and the repetitive “tzrik” notes help to find their presence. The Nilgiri Woodpigeon Columba elphinstonii also endemic to Western Ghats and slightly bigger than the Rock-pigeon can seldom be seen in Bombay shola. 


The other colourful birds sighted here are Yellow-browed Bulbul Acritillas indica, Scarlet Minivet Pericrocotus flammeus, and Squaretailed Bulbul Hypsipetes ganeesa. The Indian White-eye Zosterops palpebrosus and Black-lored Tit Machlolophus aplonotus can be easily found in low hanging branches and fences of the Bombay Shola. The glorifying flame on the dead trees with the high-pitched trill or drum call is sure to be a Greater Flameback Chrysocolaptes guttacristatus



The Velvet-fronted Nuthatch Sitta frontalis forage on the branches and trunks of the old trees which are coated with lichens and moss. The reddish bill and aquamarine upperparts of these dwarf creatures get glorified when the dense sholas are lit by the sunlight.


The Shola Forest is pleasant in the morning hours rather than in the evening. One can find the sounds of the Shola to be soothing however, due to the vehicular movement in upper and lower Shola Road, there is a lot of disturbance during the daytime. High decibel horns used in heavy vehicles disrupt the ambiance of the forest as well the resorts and pilgrims around the area cause environmental pollution. To protect and preserve the Bombay shola and its species, the government should take immediate action towards noise pollution. Noise is still not recognized as pollution among many of us. We need to think about the tiny creatures and their ability to tolerate the high decibel sounds. 

I again visited the place post COVID-19 pandemic lockdown and asked the caretaker about how the sholas looked with no human activity. He took a deep breath and said, “It felt like heaven”.


Article Published in BUCEROS (BNHS) Magazine Nov 2022 [BUCEROS Vol. 27, No. 1, 2022]. ©Satheesh Muthu Gopal

Nov 19, 2022

ஆண் எனும் அற்புதம்

இருவாட்சி என்றொரு பறவை உண்டு. மரப்பொந்துகளில் கூடமைக்கும் இப்பறவை அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. மரப்பொந்தில் உள்ளே செல்லும் பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து கூடமைத்து உள்ளேயே தங்கிவிடுகிறது. முட்டையிட்டு பத்திரமாக அடைகாத்து குஞ்சுகள் வளரும் வரை உள்ளேயே சிறைபட்டுக் கிடக்கும் தாய்மையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது ? ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் பணி செய்துகொண்டிருக்கும் ஆண் பறவையின் அற்புதங்களை எப்படி பேசாமல் விடுவது ?  பெண் பறவைக்கு மட்டுமல்லாது அதன் குஞ்சுகளுக்கும்  ஆண் பறவையே உணவை கொண்டுவந்து தரவேண்டும். குஞ்சுகள் ஆரோக்யத்துடன் வளர அதற்கு தேவையான உணவை தேடித் திரிந்து கொண்டுவர வேண்டும். இதற்கு இடையில் தனக்கான உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பறவை தானே... சிறகை விரித்து உல்லாசமாக வானில் பறக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு அதன் துயரங்கள் புரியாது. மனிதர்களிடமிருந்தும் தப்பித்து இத்தனை விஷயங்களையும் அந்த ஒரு ஆண் பறவை செய்ய வேண்டியிருக்கிறது. 


இப்படித்தானே இந்த உலகத்தில் வாழும் பல்லாயிரம் உயிரினங்களும் பரிணமித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன, மனிதர்கள் உள்பட. இந்த உலகில் எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழ ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. இத்தனை அர்ப்பணிப்புடன் வாழும் ஆண், பெண்களைப் போல போற்றப்படுவது இல்லை. சமூக குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களின் பெயரே பிரதிபலிப்பதால் ஒட்டுமொத்த ஆண்களும் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டியது இல்லை. ஆனால் ஆண்களின் மீது அப்படி ஒரு சாயம் பூசப்படுவதும் அநீதி இல்லையா ? ஆண்களின் உணர்வுகளும், கனவுகளும் ஆசைகளும் உலகம் முழுக்கவே பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் சமூக அரசியல் மாற்றங்களுக்கான முன்னெடுப்புகளை செய்வதில் பெரும்பாலும் ஆண்களே முன்னிற்கிறார்கள்.

 இருவாட்சியின் குஞ்சுகளுக்கு தாயின் கனிவு தான் தெரியும். தந்தையின் அர்ப்பணிப்பு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் ஆண் குஞ்சுகள் பெரிதானதும், தன் தந்தையைப் போலவே சுற்றிக் கொண்டிருக்கும். இது இயற்கையின் நியதி. ஆண்களின் தியாகங்கள் பேசாப் பொருளாகவே இருப்பதற்கு ஆண்களும் காரணம் தான். பரிணாம வளர்ச்சியில் எல்லா திறமைகளையும் பெற்றுக் கொண்ட ஆண், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ளவேயில்லை. தன்னுடைய கூட்டத்திலிருந்து தனிமைபடுத்தப்படும் ஆண் யானைகளைப் போல, ஆயிரக்கணக்கான பசுந்தாள்களைக் கொண்டு கூடமைத்த பிறகும், நிராகரிக்கப்படும் ஆண் தூக்கணாங்குருவியைப் போல எத்தனையோ வலிகளோடு வாழும் ஆண்கள் அத்தனை பேரும் இந்தப் புவியில் உயிர்கள் தழைத்திருக்க காரணமாக இருக்கும் அற்புதங்கள் இல்லையா ?


Nov 16, 2022

அதோ அந்தப் பறவை போல : திரு.முகமது அலி

தமிழில் எழுதப்படும் பசுமை இலக்கிய நூல்களின் மகுடத்தில் மற்றுமொரு இறகு இந்த நூல். "அதோ அந்தப் பறவை போல" என்ற தலைப்பு சினிமா பாடல் வரியாக இருந்தாலும், இது பறவையியல் பற்றிய முழுமையான அறிவியல் புத்தகம். அது எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம். 


பறவையியல் சார்ந்து புதிய தமிழ் சொற்களை இந்த நூலில் காண முடிந்தது இந்த நூலின் தனிச் சிறப்பு. கூடொட்டிப்பிழைத்தல், முன் முதிர் குஞ்சுகள், பின் முதிர் குஞ்சுகள் என புதிய சொற்களின் மூலம் பறவையியலை  எல்லோருக்கும் புரியும்படி எளிமை படுத்துயிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் உடல் அமைப்பை தனித்தனியாக விவரித்து வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு. சிறிய கோட்டோவியங்களின் மூலம் பறவைகளின் பறத்தல் முறைகள், அவற்றின் அலகு, கால்கள், நகங்கள் என தனித்தனியாக விவரித்திருப்பது எல்லோருக்கும் புரியும்படியாக இருக்கிறது. முன் முதிர் குஞ்சுகள் பரிணாம வளர்ச்சியில் இயல்பிலேயே உருமறைத் தோற்றம் கொண்ட முட்டைகளை பெற்றிருப்பதும், அவற்றின் மஞ்சள் கரு பின்  முதிர் குஞ்சுகளை விடவும் அதிகமாக இருப்பதும் என வியப்புக்குரிய, அதே நேரம் நம்பகத்தகுந்த எளிய உதாரணங்கள் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் வலசை பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் முக்கியமானவை. பறவை என்றால் என்ன, அவற்றுக்கான வரைமுறைகள், இனப்பெருக்கம், அவற்றுக்கான காலங்கள் அதற்கான காரணங்கள் என விரிவாக பேசுகிறது இந்த நூல். பல்வேறு பறவை இனங்களின் வேறுபட்ட கூடு கட்டும் முறை மற்றும் அதற்கான காரணங்கள், அது பரிணாம வளர்ச்சியோடு எப்படி தொடர்புபடுத்திப் பார்ப்பது என பல பரிணாமங்களில் பறவைகளின் அறிவியலை அலசுகிறார் ஆசிரியர். 

சிறப்புத் தகவல்கள் என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் அத்தனை ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும், சில நேரங்களில் அழிந்து வரும் பறவைகளை பற்றிய செய்திகள் கவலை தருவதாகவும் இருக்கிறது. பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் ஏன் வாழ முடியாது என்பதற்கான விடையை இந்த நூலை வாசித்து முடிக்கும்போது எல்லோராலும் உணர முடியும். 


இணையத்தில் வாங்க : https://crownest.in/product/adho-antha-paravaikla-pola-by-muhammad-ali/



Nov 14, 2022

சீகார்ப்பூங்குருவி [Malabar whistling thrush]

பாறைகளில் மோதி

கீழிறங்கும் மலையருவி

இடைவிடாதெழுப்புமந்த 

பேரொலியின் காற்றினூடே

சீழ்கையொலி மேலெழும்ப

கருவிளை நிறங்கொண்டு

சிறகசைத்து வரும் பறவை

சீகார்ப்பூங்குருவி.


கருவிளை என்பது அடர் நீல நிற சங்குப்பூ 


Nov 11, 2022

ரஷ்யாவிலிருந்து சிங்கப்பூருக்கு..!!

சிங்கப்பூரில் ஓடும் சிராங்கூன் நதியின் கரையில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சிறிய பறவையை கண்டேன். மரத்தின் கிளைகளுக்கு நடுவில் இருந்து அவை ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தன. உயரமான மரங்களில் அமரும் பறவைகளையோ அல்லது அடர்ந்த கிளைகளுக்கு இடையே இருக்கும் பறவைகளையோ பார்ப்பது சற்று கடினமானது. நான் அவதானித்துக் கொண்டிருந்த போதே நான் வழக்கமாக பார்க்கும், மலேசிய விசிறிவால் குருவிகள் (Malaysian Pied Fantail) இரண்டு அதே மரத்தில் இருந்து பறந்து சென்றன. இருப்பினும் அந்த சிறிய பறவையை எப்படியும் காண வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது. நம் கை சுண்டுவிரல் அளவே உள்ள அந்த பறவை சிறிது நேரத்தில் வெளியே வந்து வேறொரு மரத்தில் சென்றமர்ந்தது. "ஆர்டிக் கதிர்குருவி" (Arctic Warbler) எனப்படும் இந்த சிறிய பறவை ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யாவிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வலசை  வருகிறது. பறவைகளின் வலசை குணங்கள் இன்னமும் அவிழக்கப்படமுடியாத பெரும் முடிச்சாகவே இருக்கிறது. 

Arctic Warbler

பறவைகள் வலசைக்கு மிக முக்கிய காரணம், வட துருவத்தில் குளிர் காலங்களில் அவற்றுக்கு போதுமான உணவு கிடைக்காததால் அவை தென் துருவம் நோக்கி வருகின்றன. மீண்டும் வசந்த காலத்தில் அவை தன்னுடைய நிலத்திற்கே சென்று கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நடைமுறையை பல  ஆயிரம் ஆண்டுகளாக அவை தொடர்ந்து செய்கின்றன. ஓரிடத்திற்கு வலசை வரும் பறவை, அடுத்த வருடம் மீண்டும் அதே இடத்திற்கு வருவது மிகப்பெரிய ஆச்சர்யம். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை தன் இயல்பூக்கத்தில் வருவதாகவே பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றின் மரபணுவில் பொதிந்த இந்த இயல்பூக்கம் அவற்றை சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி செலுத்தலாம். 

Malaysian Pied Fantail

வலசைக்காக அவை தன்னை முன்பே தயார்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. சமீபத்தில் "Bar-tailed Godwit" என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியன் தீவுக்கு எங்கேயும் நிற்காமல் 11 நாட்கள் தொடர்ந்து பயணித்து வந்து சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து 11 நாட்கள் பயணிக்க அவை எப்படி தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இப்படி வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் ஈர நிலங்களை நம்பியே வருகின்றன. நம்முடைய தேவைக்காக இந்த நிலங்கள் மாற்றப்படும் போது அவை உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போகும். நாடுகள், எல்லைகள், அவற்றுக்கு இடையே நடக்கும் சண்டைகள் அனைத்துமே மனிதர்களுக்கு மட்டுமே. இவை எதுவம் அறியாத பறவைகள் தங்களுக்கான வாழிடத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. ரஷ்யாவின் எல்லையில் வானம் புகை படிந்து காணப்படுகிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆர்டிக் கதிர்குருவி மார்ச் மாதத்தில் திரும்பிச் செல்லும். அங்கே சென்று அவை உணவு தேடவும், கூடமைக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற சூழல் நிலவ வேண்டும். அதை ஆறறிவு(?) கொண்ட மனிதர்கள் செய்யவேண்டும் என்பதே நகைமுரண். 

Nov 10, 2022

கடல் : திரு.சமஸ்

சங்காயம் என்ற சொல்லை முதல் முறையாக இந்த நூலில் வாசித்து தெரிந்து கொண்ட போது மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை எவ்வளவு ஆழம் சூறையாடுவான் என்பதற்கு சங்காயமே உதாரணம். சங்காயம் என்பது மீன் குஞ்சுகள். இறால் மற்றும் சுறாக்களுக்காக விரிக்கப்படும் வலைகளில் சிக்கி, யாருக்கும் பயனற்று கோழித் தீவனமாக செல்லும் இந்த மீன் குஞ்சுகள் தான் கடல் வளத்தின் எதிர்காலம். 

இப்படி தமிழகத்தின் கடல் சந்திக்கும் ஒவ்வொரு சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார் சமஸ் அவர்கள். நிலமும் வனமும் சீரழிவதை நாம் தினமும் கண் முன்னே பார்க்கிறோம். ஆனால் கடல் வளம் கொள்ளையடிக்கப்படுவதும், மாசுபாடடைவதும் பெரும்பாலும் கவனம் பெறாமலேயே இருக்கிறது. இந்த நூலின் தரவுகளுக்காக சமஸ் அவர்கள் செய்த பயணங்களும் அர்ப்பணிப்பும் ஆச்சர்யம் ஊட்டுகிறது. ஒரு எழுத்தாளராக வருங்கால தலைமுறையின் மேல் அக்கறை கொண்டவராக அவர் தன் கடமையை செய்திருக்கிறார். அரசும் அதிகாரிகளும் இவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே எதிகாலத்திலும் கடல் வளம் ஓரளவேனும் காப்பற்றப்படும். 


பருவ நிலை பிறழ்வு மூன்றாம் உலக நாடுகளில் மிகப் பெரிய சவாலாக மாறிவரும் வேளையில், அதன் சாட்சியாக நம் கண் முன்னே இருப்பதும் கடல் தான். ஆவுளியா போன்ற அறிய உயிரினங்களை பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. பழவேற்காடு முதல் குமரி வரை எத்தனை கடலோர கிராமங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊருக்கும் ஏதோவொரு சூழலியல் பிரச்சனை இருப்பதும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது அந்த  ஊரும் மக்களும் தான் என்றால், நம் தலைமுறையின் அலட்சியத்தை விடவும் அபாயகரமான அச்சுறுத்தல் அடுத்து வரும் தலைமுறைக்கு என்னவாக இருக்கும் ?

மீனவன் என்ற சொல்லை உடைத்து கடலோடி என அறிமுகப்படுத்துகிறார். மீனவர்களுடனான, மன்னிக்கவும், கடலோடிகளுடனான உரையாடல் மூலமாகவே அதை தெளிவுபடுத்துகிறார். ஒரு விவசாயியை எப்படி நெல்லுக்காரன் என்று சுருக்க முடியாதோ அது போல ஒரு கடலோடியை மீனவன் என சுருக்க முடியாது என்று விளக்கும் இடத்தில் கடலோடு சேர்ந்து கடலோடிகளும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். 

பழனியில் வளர்ந்த எனக்கு கடல் என்பது எப்போதும் அதிசயம் தான். கடல் மீதான பார்வையை, கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை என பல பரிமாணங்களை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். 


யாருடைய எலிகள் நாம்?