Nov 25, 2021

பனங்காடை [Indian Roller]

பாலை நிலப்பரப்பை 

பயனற்ற நிலமென்று 

பனையெல்லாம் வெட்டி

வீட்டுமனையாக்கி 

பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்

வாழிடமின்றி 

அலையும் அப்பறவைகளின் பெயர்

பனங்காடை.



12 comments:

  1. வீணையை உடைத்து விட்டு
    விரலிசையைத் தேடுவது போல்
    பனையை வெட்டி விட்டு
    மனையை எங்கும் உருவாக்கும்
    மனமில்லா மனிதர்களே..!

    தாயில்லாப் பிள்ளையைப் போல்
    தவிக்கின்ற பனங்காடையைப் பார்
    பாவியாகிப் போய்விடாமல் பனைகாக்க
    தாவிவா பறவைகள் வாழட்டும்..!

    - ஆர்க்காடு ராஜா முகம்மது.

    ReplyDelete
  2. Sad to see them every time on plots ☹️ மனைக்காடை😞

    ReplyDelete
    Replies
    1. ஒரே வார்த்தையில் அதன் நிலையை சொல்லிவிட்டீர்கள் ராஜ்...

      Delete
  3. Absolutely true words 😞 Amazing poem 👏🏻👌🏻

    ReplyDelete
  4. @Raj,@Voyager,@சதீஸ்
    அனைவருக்கும் நன்றிகள்.
    - Raja Mohammed

    ReplyDelete
  5. இதன் பேர் தெரியாமல் இதனை கோவில்பட்டி பக்கத்தில் முத்துகோன் நினைவு மண்டபத்துக்கு பக்கம் படம் எடுத்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு. கோவில்பட்டியில் இவற்றை பார்ப்பது சாத்தியம் தான்.

      Delete