Nov 22, 2021

குள்ளத்தாரா [Cotton Pygmy Goose]

செந்தாமரை பூத்த குளத்தில் 

நுண்ணிய நீர்த்தாவரங்களின் நடுவே

நீந்தி வரும் குள்ளத்தாரா 

தண்ணீரில் பிரதிபலிக்கும் 

மேகத்தின் பிம்பங்களை

சிறகோடு அணைத்துக்கொண்டபின்

மரக்கிளையில் அமர்ந்து  

சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்

பொழிகிறது மழை.



12 comments:

  1. சிறகுகளை விரித்துச்
    சிலிர்க்கையில் - நாம்
    பறந்து சிலிர்க்கிறோம்
    மனப்பெருவெளி எங்கெங்கிலும்
    மனிதத்தின் மாட்சிமைகளில்..!

    ReplyDelete
  2. Wow 🤩 Awesome 😍👌🏻👏🏻

    ReplyDelete
  3. மரக்கிளையில் அமர்ந்து

    சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்

    பொழிகிறது மழை.Touching .... 😍

    ReplyDelete
  4. மழையுடன் சேர்ந்து கவிதையும் பொழிகிறது .அருமை

    ReplyDelete