செங்கால் நாரை [White Stork]

புதுக்கவிதைகள் எழுதுமொருவன் 

வருடாவருடம் வலசை வரும் 

செங்கால் நாரைகளுக்காக 

காத்திருக்கிறான்.

மிகவும் அருகிப்போன இப்பறவைகளை 

காணக்கிடைக்காது தேடிக்களைத்த பொழுது 

புறநானூற்றுப் புலவரின் மேல் 

கொஞ்சம் பொறாமை 

வரத்தான் செய்கிறது.


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

8 Comments

  1. (புதுப்)பாடல் பெற்ற பறவை!

    ReplyDelete
  2. Awesome it’s like a poems I studied at school 👌🏻😍

    ReplyDelete
    Replies
    1. சத்திமுற்றப் புலவர் (புறநானூறு) பாடிய செங்கால் நாரை..


      நாராய் நாராய் செங்கால் நாராய்
      பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
      பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
      நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
      வடதிசைக்கேகுவீராயின்
      எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
      நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
      பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
      "எங்கோன் மாறன்வழுதி கூடலில்
      ஆடையின்றி வாடையின் மெலிந்து
      கையது கொண்டு மெய்யது பொத்திக்
      காலது கொண்டு மேலது தழீஇப்
      பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
      ஏழையாளனைக் கண்டனம் எனுமே....

      Delete
  3. நாராய் நாராய் ❤️❤️

    ReplyDelete