தொழிற்சாலைக் கழிவுகள் கலக்காதவரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
பெருநகரச் சாக்கடைகள் கலக்காதவரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
மனித இனம் உருவாகாத வரை
கங்கை புனிதமாகத் தான் இருந்தது.
இப்போதும் கங்கையின் புனிதம்
மிச்சமிருக்கிறது.
நன்னீர் ஓங்கில்கள்
மிச்சமிருக்கும் வரை
கங்கையின் புனிதமும்
மிச்சமிருக்கும்.
*ஓங்கில் - Dolphin
No comments:
Post a Comment