இது ரகசியம் அல்ல

நான் எழுதும் கவிதைகளில் சில 

எனக்கு விருப்பமானவையாக இருந்தன.

பின்னொரு நாள் நான் எழுதிய எல்லா கவிதைகளும் 

எனக்கு விருப்பமானவையாக மாறின.

நான் எழுதும் எல்லாமே கவிதைகள் 

என்று எண்ணத் தொடங்கினேன்.

நான் எழுதும் எல்லாவற்றையும் கவிதைகள் 

எல்லோருமே நம்பத் தொடங்கிவிட்டனர்.

உங்களில் ஒரு சிலருக்குத் தெரியும்.

இங்கே நான் என்பது நான் அல்ல.

இருந்தால் என்ன.

கவிதைகள் எல்லா நேரங்களிலும் திகட்டுவதில்லை.

Post a Comment

0 Comments