வானில் பறக்கும் புள்ளெலாம் : திரு.தியடோர் பாஸ்கரன்

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய மற்றுமொரு சூழலியல் மற்றும் கானுயிர் சார்ந்த  தொகுப்பு.

இந்தியாவின் பல்வேறு காடுகளை பற்றியும் எண்ணற்ற கானுயிர்களை நாம் எவ்வாறு இழந்து வருகிறோம் என்பதை பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். இந்திய காடுகள் சட்டம் எப்போது உருவானது, காடுகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன என்பது போன்ற செய்திகளும் இந்த புத்தகத்தில் உண்டு. அந்தமான் தீவுகள் எப்படி உருவாயின, அங்கே காணப்படும் ஓரிட வாழ்விகள் யாவை என பல்வேறு தளங்களில் இந்த கட்டுரை தொகுப்பை எழுதியிருக்கிறார். 

தமிழ்நாட்டிற்கு வலசையாக வரும் பட்டை தலை வாத்துகள் (Bar Headed Goose), சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அன்னமாக இருக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருப்பது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஐரோப்பாவில் காணப்படும் "Mute Swan" தமிழ் நாட்டில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை என்பதால், பட்டை தலை வாத்துகள், முன்பு அன்னம் என அழைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக ஆசிரியர் கருதுகிறார். இந்த கருத்தில் இருந்தே ஆசிரியருக்கு கானுயிர்கள் மீது இருக்கும் ஈடுபாடு அளப்பரியது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.  


சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட மற்றொரு வலசை பறவையான செங்கால் நாரைகள் (White Stork) தற்போதும் தமிழ் நாட்டிற்கு வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போயிருப்பதை சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். 

மான்களுக்கும் இரலைகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கும் ஆசிரியர், இரலையே (Antelope) என்றாலும் "Blackbuck" வெளிமான்கள் என்று அழைக்கப்படுவதையும் அதன் வாழிடச் சூழல் சிதைந்து போயிருப்பதையும் விரிவாக சுட்டிக் காட்டுகிறார். சுமார் நான்கு லட்சம் என்ற அளவில் இருந்த வெளிமான்கள் 25000 என்ற அளவிற்கும் குறைந்து போனதற்கு புல்வெளிக்காடுகளை இழந்ததே எனக் குறிப்பிடுகிறார்.

திமிங்கிலத்தின் (Blue Whale) வலசை பாதை குறித்தும், திமிங்கிலத்தை நேரில் பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அற்றுப்போன கானமயில் (Great Indian Bustard), வரகுக்கோழி (Lesser Floricon), சிவிங்கப்புலி (Asiatic Cheetah) போன்றவற்றை பற்றிய தகவல்களும் இந்த புத்தகத்தில் உண்டு.

கானுயிர் பேனலில் மொழியின் முக்கியத்துவம் அவசியமானது என்பதை பல உதாரணங்களின் மூலமாக சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார். காட்டு மாடு (Gaur) காட்டெருமை என்றும், கருநாகம் (King Cobra) ராஜநாகம் என்றும், அருவி (Water Falls) நீர்வீழ்ச்சி என்றும், சோலைமந்தி (Lion Tailed Macaque) சிங்கவால் குரங்கு என்றும்,அலையாத்திக் காடுகள் (Mangrove Forest) மாங்ரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுவதை எல்லாம் விரிவாக எடுத்துரைத்து வேதனையை வெள்ளிப்படுத்தியுள்ளார்.

திரு.தியடோர் பாஸ்கரன் அவர்களின் மற்ற நூலகள் :

இந்திய நாயினங்கள் (ஒரு வரலாற்று பார்வை)

https://ivansatheesh.blogspot.com/2020/05/blog-post_23.html


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக :


கானுறை வேங்கை :


Sprint of the Blackbuck: Edited by Mr.S.Theodre Baskaran


Post a Comment

2 Comments

  1. ஆம் சதீஸ்.. தமிழில் சூழலியல் எழுத்து இவரிடம் இருந்தே ஏற்றம் அடைந்தது.. பறவைகளுக்கு தமிழில் பெயர்கள் கொண்டு எழுதுவது, ஆங்கில பெயர்களை நேரடையாக மொழிபெயர்ப்பதை தவிர்ப்பது என்று பலருக்கும் முன்னோடியாக இருப்பவர்.. - செழியன்.ஜா

    ReplyDelete
    Replies
    1. இவரின் எழுத்துக்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

      Delete