Jun 5, 2017

நீங்கள் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது ?

கோடை விடுமுறையில் சுற்றுலா என்றாலே அது பெரும்பாலும் மலைப்பகுதிளாகத்தான் இருக்கிறது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மூனாறு, வால்பாறை என செல்லும் நாம், நம் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதும் அவசியம் இல்லையா? சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இது போன்ற வனப்பகுதிக்குள் செல்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஞெகிழிப் பைகள் 

சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பைகள் காடு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கூட ஞெகிழிப் பைகளை காண முடிகிறது. ஞெகிழிப் பைகளால் மண் வளம் கெடுவதோடு அவற்றை உண்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து இறக்கின்றன.






பலியாகும் உயிர்கள்

வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் விலங்குகள் கணக்கில் அடங்காதவை. பாம்புகள், தவளைகள் உள்ளிட்ட ஊர்வன மற்றும் இருவாழ்விகள் இதனால் அதிக அளவில் இரவு நேரங்களில்  உயிர் இழக்கின்றன. சாலை ஓரங்களில் நடந்து சென்றால் ஏராளமான பறவைகள் அடிபட்டு உயிர் இழந்திருப்பது தெரியும். குரங்குகள், மான்கள் மட்டுமல்லாது, சிறுத்தைகள், புலிகள் யானைகள் கூட சாலைகளில் அடிபட்டு உயிர் இழப்பது தொடர்ந்து நடக்கிறது.



காட்டுத்தீ


கவனக்குறைவோடு எந்த அக்கறையும் இல்லாமல் தூக்கி எரியும் சிகரட் துண்டுகள் காட்டையே எரிக்கின்றது.

ஒலிப்பான்கள்

கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படும் அதிக டெசிபல் ஒலிப்பான்கள் காட்டின் அமைதியான சூழலை குலைக்கிறது. இது காட்டில் வாழும் உயிர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

உணவுக் குப்பைகள்

சாலை ஓரங்களில் அமர்ந்து உண்டுவிட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களாலும், வன விலங்குகளுக்கு நேரடியாக உணவு தருவதன் மூலமாகவும், காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. காடுகளில் உணவை பெற வேண்டிய காட்டுயிர்கள் மனிதர்களால் தூக்கி எறியப்படும் இந்த உணவுகளை உண்டு சூழலில் அதன் பங்கை செய்ய முடியாமல் போகிறது. சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழக்கவும் நேரிடுகிறது.



மனிதர்கள் நுழையாதவரை காடுகள் நன்றாகத்தான் இருந்தது. சாலை ஓரங்களில் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களை பார்க்கும் போதெல்லாம், காடுகளின் எதிர்காலம் நொறுங்கிப்போவதை உணர முடிகிறது. 



6 comments:

  1. உண்மை😓, வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் இயற்கையைக் காப்பற்றிக் கொடுக்க வேண்டும். இங்கு காப்பாற்றுவது என்பது, எதுவும் செய்யாமல் இயற்கையை அது போக்கில் விட்டு விடுவதே...

    ReplyDelete
  2. This is due to the uncontrolled development of tourism and the deforestation of vehicles carrying liquor and plastic bags without proper testing.

    ReplyDelete
  3. The interest in nature of any tourist has diminished. Their purpose is to explore the cool place and what's fun in the forest, and the rivers and waterfalls near it to enjoy delicious food and comfortable place to stay.

    ReplyDelete