பற்றி எரியும் காடு

ஜனவரி முதல் மே மாதம் வரையில் அவ்வப்போது சொல்லப்படும் செய்தி காட்டுத்தீ. இந்த காட்டுத்தீக்கு என்ன காரணம் என்பதை எந்த ஊடகமும் சொல்வதில்லை. சுற்றுலாப் பயணிகள் தூக்கி எரியும் சிகரெட் துண்டுகள் காய்ந்து போயிருக்கும் சருகுகளில் பட்டு எளிதில் தீப்பற்றிக் கொள்கிறது. 



கவனக் குறைவு காரணமாக யாராது தூக்கி எரியும் இந்த நெருப்புத் துண்டுகள் நம் வனத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவருகிறது. இதை பற்றி ஊடகங்கள் விளக்கமாக சொல்வதில்லை. "விலை உயர்ந்த மரங்கள்" எரிந்து நாசம் எனச் சொல்லி வனத்தை பணமாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். பழனி மலைத் தொடர்ச்சியில் தொடந்து காடு பற்றி  எரிந்து வருகிறது. 

ஆனால் ஊடகங்களில் வரும் செய்தியில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தூக்கி எரியும் சிகரட் துண்டுகள் பற்றி வருவதில்லை. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டிய ஊடகங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன "விலை உயர்ந்த மரங்கள்..........."


தினமலரில் வந்த செய்தி : "திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்தது".

பழநி: கொடைக்கானல் மலைப்பகுதி சவரிக்காடு வனப்பகுதியில், ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள் எரிந்தன.பழநி -கொடைக்கானல் ரோடு, சவரிக்காடு, வடகவுஞ்சி, மேல்பள்ளம் ஆகிய பகுதியில் தேக்கு, புங்கை,கொங்கு, வேட்கை, தைலமரங்கள் மற்றும் ஏராளமான மூலிகைச்செடிகள் உள்ளன. தொடர்ந்து மழை இல்லாததால், அதிகமான வெப்பம் காரணமாகவும், இப்பகுதிகளில் மரம், செடிகள் காய்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, சவரிக்காடு, வடகவுஞ்சி பகுதியில், திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலானது.பழநி வனரேஞ்சர் கணேசன் கூறுகையில்,"போதிய மழையில்லாததால், வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மேல்பள்ளம், வடகவுஞ்சி பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் தீ பற்றி மரங்கள் எரிந்தது. அவர்கள் அதை கட்டுப்படுத்திவிட்டனர். மேலும் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் இருப்பதற்கு, பாரஸ்டர் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை,” என்றார்.


Post a Comment

0 Comments