Mar 27, 2011

ஒலி மாசு

தொழிற்சாலை கழிவுகள், நெகிழிக் கழிவுகள், வாகனப் புகை, மருந்துக் கழிவுகள், பூச்சிக்கொல்லி, ரசாயன கழிவுகள் போன்ற நம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு மாசுகளுக்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொரு மிகப்பெரிய சூழல் சீர்கேடு ஒலி மாசு - Noise Pollution
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒலி மாசுக்கான பல்வேறு காரணிகளை ஆராய்ந்து மத்திய அரசு அவற்றை கட்டுக்குள் கொண்டு வர சட்டங்கள் இயற்றியுள்ளது.

ஒலி மாசுக்கான முக்கிய காரணிகளான ஜெனரேட்டர், பட்டாசு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் ஒலி அளவு கட்டுக்குள் இருப்பதற்கான வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. தொழிற்ச்சாலைகளின் ஒலி வரம்பு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. பொதுவாக வாகனகளின் ஒலி வரம்பு 91 டெசிபல் என்ற அளவை தாண்டாது இருக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களின் ஒலி வரும்பு 82 டெசிபலை தாண்டக்கூடாது.


மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஒலி மாசுபடுவதற்க்கு  நிறைய காரணங்கள் இருக்கின்றன. நம் கலச்சரதொடு கலந்துவிட்ட சில காரணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் பழக்குமும், கோவில் திருவிழக்களில் ஒலிப் பெருக்கி பயன்படுத்தும் பழக்கும் உள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒலி மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. கேட்கும் திறம் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் உருவாகவும் வழி வகுக்கிறது. மனிதர்களுக்கு மட்டும்  அல்லது பறவைகளுக்கும் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பறவைகள் இனப்பெருக்க காலங்களில் ஒலி எழுப்பி தன்னுடைய இருப்பை தெரியப்படுத்தும்.

மேலும் விலங்குகள் வேட்டைகளின் போது ஒலி எழுப்பி தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.அதிகப்படியான ஒலி, இவற்றின் தகவல் பரிமாற்றத்தில் இடையூறை ஏற்ப்படுத்துவதால் அவை அழிவதற்கு வாய்ப்பு ஏற்ப்படுகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதன் மூலமாகவும், வாகனங்களில் ஒலிப்பான்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலமாகவும் பறவைகளும், விலங்குகளும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகின்றன. வயதானவர்கள், குழந்தைகள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மிகவும் சுலபமான வழிமுறைகளை கொண்டு ஒலி மாசுபாட்டை குறைக்க முடியும். பட்டாசு வாங்கும் போது, அவை சட்ட நடைமுறைக்கு உட்பட்டதா என தெரிந்து வாங்க வேண்டும்.

கோவில் திருவிழக்களில் தேவைக்கு ஏற்ப ஒலிப் பெருக்கியை பயன்படுத்தலாம்.


வாகனகளில் ஒலிப்பான்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். சாலை சந்திப்புகளில் சிக்னலுக்கு காத்திருக்கும்போது மூன்று நொடிகள் மிச்சமிருக்கும் போது நூறு வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒலி எழுப்புவதை கேட்டிருப்பீர்கள். இது முற்றிலும் தேவையற்றது.
முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒலி மாசு படமால் இருக்க சின்ன சின்ன பங்களிப்பை செய்தாலே சுற்றுச் சூழலை பெரிய அளவில் மாசுபடாமல் காப்பாற்ற முடியும். முக்கியமாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். அடுத்த முறை சிக்னலில் நிற்கும் போது நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment