நிறம் மாறுமா பெங்களூரு?

மிக்சியா க்ரைண்டரா என தெரியமால் தமிழ் நாட்டு மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் போது, கர்நாடக அரசின் வனத்துறை அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

 
ஒவ்வொரு பள்ளி குழந்தைக்கும் இலவசமாக மரக் கன்றுகளை வழங்குகிறது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவதை குழந்தைகள் உணர இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் வனம் உருவாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் சிறிய மாதிரி வனம், மாணவர்களுக்கு இயற்கையின் மீதான ஒரு ஈடுபாட்டை உருவாக்கும்.

சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். ஏராளமான பறவைகளின் வாழ்வாதரத்திற்க்கு துணை புரியும். ஒரு புறம் வனங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில், இப்படி உருவாகும் வனங்கள் சூழலை சமநிலையில் வைத்திருக்கும். இதே மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறும் போது, இயல்பாகவே அவர்களுக்குள் வனத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். 

மேலும் பெங்களூரை சுற்றிலும், லால் பாக் மாதிரியான மேலும் நான்கு மிகப்பெரிய பூங்காக்களை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்தப்பட்டால் பெங்களூர் மீண்டும் பசுமை நகரமாக வாய்ப்புகள் உண்டு. மென்பொருள் என்ற அடையாளத்தை தாண்டி மீண்டும் இந்தியாவின் பூங்கா நகரமாக மாறக்கூடும்.




யார் எப்படி மாறினால் என்ன? நமக்குத்தான் கிரைண்டர் கிடைக்க இருக்கிறதே....

Post a Comment

0 Comments