குரல் கொடுப்போம்

புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. கல்லூரிகளில் பேசும்போது மாணவர்களின் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியும் புலிகளை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஆனால்  நாம் எடுக்கும் முயற்சிகளில் தான் தேக்கம். இந்த தேக்கம் நீங்கினால், நல்ல காலம் புலிகளுக்கும் மட்டுமல்ல, மனிதர்களுக்கும்.



இந்திரா காந்தியில் முயற்சியால் 70 களில் அழிவில் இருந்த புலிகள் மீண்டன. தற்போது அதையும் விட துரிதமான நடவடிக்கையும், மக்கள் சக்தியும் தேவைப்படுகிறது. தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்கே நல்லது நடந்தாலும் பாராட்டுங்கள். திறமையான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி வாழ்த்துங்கள். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே இயற்கையின் மீதான பிணைப்பை உண்டாக்குங்கள்.

சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக வரும் மார்ச் 20 அன்று பழனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இணைந்திருங்கள். அது தொடர்பான விவரங்களை தெரியப்படுத்துகிறேன். யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.



நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு குரல் கொடுங்கள். மாற்றங்கள் மாறாதது எனில், அதை மாற்றுவதில் என்ன தவறு?

Post a Comment

0 Comments