Aug 24, 2023

ஸ்ரீ சாரதா கல்லூரி - சேலம். நன்றி

சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரியின், தாவரவியல் பிரிவில் பேச அழைத்திருந்தார்கள். காட்டுத்தீ குறித்து மாணவிகளிடம் உரையாடினேன். காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது, எப்படி கட்டுப்படுத்துவது என என்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன். நிகழ்வின் முடிவின் மாணவிகள் பலரும் எழுப்பிய கேள்விகள் உற்சாகம் அளித்தது. அந்த கல்லூரிக்கு என் நன்றிகள்.


Aug 18, 2023

செங்குதச் சின்னான் [Red-vented Bulbul]

மல்லிகைப் பந்தலின் மையத்தில்  

கூடமைக்கிற சின்னான் குருவிகள்,

பூக்களை கொய்கிற கைகளை 

அறியாமலில்லை.

கிண்ண வடிவ கூட்டின் ஆழத்தில் 

நிறைந்திருக்கிறது கூடுதல் 

நம்பிக்கை.