நீண்டதொரு மெல்லிய காம்பில்
உதிராதிருக்கும்
ஓரிதழ் போன்றதொரு
இரட்டைவாலுக்கு,
இடையூறின்றி இருக்குமொரு
உடைந்த மரக்கிளையில்,
வழக்கமாக வந்தமரும்
துடுப்புவால் கரிக்குருவி,
சீழ்கை ஒலியெழுப்பி
பலகுரலில் பாடித்திரியும்.
நீண்டதொரு மெல்லிய காம்பில்
உதிராதிருக்கும்
ஓரிதழ் போன்றதொரு
இரட்டைவாலுக்கு,
இடையூறின்றி இருக்குமொரு
உடைந்த மரக்கிளையில்,
வழக்கமாக வந்தமரும்
துடுப்புவால் கரிக்குருவி,
சீழ்கை ஒலியெழுப்பி
பலகுரலில் பாடித்திரியும்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக (05-May -2022) பழனி மலைத் தொடரில் வாகனத்தில் அடிபட்டு ஒரு சிறுத்தை இறந்தது. இது சாதாரணமாக கடந்து போகக் கூடிய செய்தி அல்ல. கொடைக்கானலுக்கு செல்ல புதிய சாலைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு நகரம் எவ்வளவு வாகனங்களை தாங்கும் என்றோ, ஒரு மலைத் தொடர் எத்தனை சாலைகளை தாங்கும் என்றோ எந்த வரைமுறையும் இல்லை.
இனியாவது கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, வேகத் தடைகளை அமைத்து, சுற்றுலா பயணிகளை வழியில் வாகனங்களை நிறுத்தாமல் தடுத்து, கூடுதல் கண்காணிப்பாளர்களை நியமித்து, விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலித்து இந்த மலைத் தொடரையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வழி செய்ய வேண்டும்.
நான் சுற்றுலாவை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் காடுகளையும் காட்டுயிர்களையும் இழந்துவிடாத அளவிற்கு முறைப்படுத்தப்பட்ட சுற்றுலாவை சாத்தியமாக்க வேண்டும்.