கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசப்பட்டது தற்போது சாத்தியமாகியிருக்கிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அவுளியாக்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி [Dugong Conservation Reserve] உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

ஆவுளியா [Dugong] ஒரு தாவர உண்ணி. பாலூட்டி. கடல் வாழ் உயிரினம். பரிணாம வளர்ச்சியில் ஒரு அற்புதம்.

ஆழம் குறைவான கடல் பகுதியில் தாவரங்களை உண்டு வாழும் இந்த உயிரினம் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் தற்போது மிகவும் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய முன்னெடுப்புகள் இந்த உயிரினத்தை அழிவில் இருந்து பாதுகாக்கும் என நம்புவோம்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய  பதிவு : ஆவுளியா