Jan 26, 2022

பறவைகள் சூழ் உலகு : திரு.வி.விக்ரம்குமார்

சித்த மருத்துவர் திரு.வி.விக்ரம்குமார் அவரகள் "பறவைகள் சூழ் உலகு" என்ற நூலின் மூலம் பறவை நோக்குதலில் தான் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ஒரு சித்த மருத்துவர் இயற்கையை நேசிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இயற்கையை பறவைகளின் மூலமாக நேசிக்கும் மருத்துவர் தன் எழுத்தின் மூலமாக அந்த நேசிப்பை நமக்கும் கடத்துகிறார்.


இருபது கவித்துவமான தலைப்புகளோடு பல்வேறு பறவையினங்களை பற்றிய கட்டுரைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார். "மரமென்ன கோபித்துக் கொள்ளவா போகிறது? என்ற தலைப்பில் மரங்கொத்திகளை அறிமுகப்படுத்துகிறார். பறவைகளின் சரியான தமிழ் பெயர்களை பயன்படுத்தி இருக்கிறார். 

பறவைகளை ரசிப்பதோடு இல்லாமல் அவற்றின் வாழிடம் மற்றும் சூழலை அறிவியல் பூர்வமாக உணர்ந்து தன் அனுபவங்களோடு இணைத்து எழுதி இருப்பது சிறப்பு. மேலும் சூழல் மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் பறவைகளின் வாழிடங்களை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. 

பறவைகளின் வாழிடங்கள் மனிதர்களால் சிதைக்கப்படுவதையும், அவை காப்பற்றப்பட வேண்டும் என்பதையும் பல சூழலியலாளர்கள் வலியுறுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், அவர்களின் கருத்துக்கு வலு சேர்க்கிறது இந்த நூல்.

இந்த நூலை காக்கைக்கூடு இணையதளத்தில் பெற முடியும். 

https://crownest.in/product/paravaikal-suzh-ulagu-vikramkumar/



No comments:

Post a Comment