செங்கால் நாரை (White Stork)


1700 ஆண்டுகளுக்கு முன்பு சத்திமுற்றப் புலவர் பாடிய செங்கால் நாரையை முதன் முதலாக சுவிட்சர்லாந்தில் பார்த்தேன்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....


பறவைகள் என்னை சிந்திக்க வைக்கின்றன.
பறவைகள் என்னை பேச வைக்கின்றன.
பறவைகள் என்னை எழுத வைக்கின்றன.பறவைகள் என்னை பறக்க வைக்கின்றன......................

Post a Comment

0 Comments