பறவைகள் சரணாலயங்கள் : தமிழ் நாடு

நம் வாழ்விடங்களை சுற்றி எப்போதும் பறவைகள் வாழ்ந்துகொண்டிருந்தலும் பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. இன்றும் கூட மாநகரங்களில் பறவைகள் தங்கள் இருப்பை பெரிய சிரமங்களுக்கிடேயே நிலை நிறுத்தி வருகின்றன. கிராமங்களில் தென்படும் பறவை இனங்கள் யாவும் மாநகரங்களில் தென்படுவதில்லை. இருப்பினும், நிறைய மரங்கள் வளர்ப்பதன் மூலமாகவும், அவை குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதன் மூலமாகவும், ஒலி மாசு குறைக்கபடுவதன் மூலமாகவும் அவற்றின் எண்ணிக்கையை பெருக்கவும், நகரங்களுக்குள் வந்து போகவும் செய்ய முடியும்.



தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் பறவைகள் சரணாலயங்கள் செயல்படுகின்றன.

அவற்றில் சில:

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம் : திருவள்ளூர் மாவட்டம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் : காஞ்சிபுரம் மாவட்டம்
கரிகில்லி பறவைகள் சரணாலயம் : காஞ்சிபுரம் மாவட்டம்
கரைவேட்டி பறவைகள் சரணாலயம் : பெரம்பலூர் மாவட்டம்
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் : திருவாரூர் மாவட்டம்
வடுவூர் பறவைகள் சரணாலயம் : திருவாரூர் மாவட்டம்
சிற்றங்குடி பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் : திருநெல்வேலி மாவட்டம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் : ஈரோடு மாவட்டம்
மேல்செல்வநூர் - கீல்செல்வநூர் பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
கஞ்சிரன்குலம் பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் : சிவகங்கை மாவட்டம்







இது தவிர, இன்னும் முறையாக அறிவிக்கப்படாத, பல்வேறு இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி செல்வதுண்டு. பெரும்பாலும் ஏரிகளையோ அல்லது குளங்களையோ தேர்ந்தடுக்கும் பறவைகளுக்கு, பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம், பார்த்துக்கொள்வதில், அந்த கிராம மக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் பட்டாசு வெடிக்காத கிராம மக்கள் தான் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Post a Comment

0 Comments