Feb 26, 2011

பருவ நிலை மாறுகிறது


BASIC நாடுகளான பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு இடையிலான பருவ நிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல் மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கிறது. இந்த முறை இந்த கலந்துரையாடல் இந்தியாவில் நடப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. காலநிலை மாற்றம் பற்றி ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மையான நிகழ்ச்சியாக இது நடைபெற வேண்டும். ஓவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு மற்ற நாடுகளை கை காட்டாமல், ஒவ்வொருவரும் தன் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டிய காட்டயத்தில் உள்ளோம் என்பதை உணர வேண்டும்.

உண்மையில் புவி வெப்பமாதல் மிகப்பெரிய சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை விட, மக்களின் செயல்பாடுகள் அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. ஒவ்வொரு தனி மனிதனும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு துணை புரிய வேண்டும். என்ன செய்ய போகிறீர்கள்?

No comments:

Post a Comment