Feb 27, 2011

இருவாச்சிகளுக்கு புதிய சிக்கல்

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அழகிய வனம் அதிரபில்லி மற்றும் வளச்சல். கேரள அரசு புதிதாக திட்டமிட்டிருக்கும் அணை மின் நிலையம் தொடங்கப்பட்டால் இந்த அழகிய வனம் மட்டுமல்ல, அதில் வாழ்ந்துவரும் மிகவும் அரிதான அழகான இருவாச்சி பறவைகளை நாம் இழக்க வேண்டியது வரும். சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு.மாதவ் அவர்கள் மார்ச் மாதம் இறுதிக்குள் சமர்பிக்கபோகும் அறிக்கையை பொறுத்தே எதுவும் நடக்கும். ஏற்கனவே இந்த இருவாச்சி பறவைகளின்  எண்ணிக்கை குறைந்து வருவதோடு பார்ப்பதற்கே அரிதாகிவிட்டது. பசுமை மாறா மழை காடுகளில் வசிக்கும் இந்த அற்புத பறவை கேரளாவில் வேறு எங்கும் கிடையாது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி வரும் 57 இருவாச்சி பறவைகள் மட்டுமே இந்த வனப் பகுதியில் மிச்சம் உள்ளது.

எத்தனை எத்தனை பிரச்சனைகளோ ஏதும் அறியா உயிர்களுக்கு.
அத்தனைக்கும் குரல் கொடுப்போம் அழகிய வனம் படைப்போம்.

No comments:

Post a Comment