பசுமை தேடும் பாலைவனம் : திரு.தேன்மொழியன்


நண்பரும் கவிஞரும் ஆன திரு.தேன்மொழியன் எழுதிய "பசுமை தேடும் பாலைவனம்" என்ற புத்தகத்தை படித்தால் யாரும் அதை முதல் புத்தகம் என்று சொல்லி விட முடியாது. மரபுக் கவிதைகளில் விளையாடி இருக்கிறார். சந்தமும் எதுகை மோனையுமாய் அழகு தமிழில் அற்புதமாய் வடித்திருக்கிறார். குடும்ப உறவுகள், ஈழம், தமிழ் என பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார். கலாச்சாரம், பண்பாடு, தாலாட்டு, வேளாண்மை என கிராமியம் தெறிக்கும் இவரின் பக்கங்களை புரட்டும் நகரத்துக்கு காற்றுக்கும் மண் வாசனை தொற்றிக்கொள்ளும். கல்வியின் முக்கியத்துவத்தை தாலாட்டு மூலமாக ஒரு தாய் தன் குழந்தையிடம் பாடுவது போல எழுதியிருக்கும் பாடல் இதுவரை எங்கும் கேட்டிராத புதிய வகை தாலாட்டு.

Post a Comment

0 Comments