தேயிலைக்கும் காஃபிக்கும் 

மலைச்சவுக்கு மரங்களுக்கும் 

தப்பித்த மலைச்சரிவில்

கூடமைக்கும் இருவாச்சி, 

மரப்பொந்தின் இருளுக்குள்

ஒளித்துவைக்கிறது 

ஒரு சோலைக்காட்டை.