Moa | Elephant Bird | Dodo - பறக்க இயலா பறவைகள்


இந்த உலகில் எப்போதெல்லாம் மனிதன் புதிய தீவுகளில் காலடி எடுத்துவைத்தானோ அப்போதெல்லாம் அங்கிருந்த சூழலை மாற்றி பரிணாம வளர்ச்சியில் பல மில்லியன் ஆண்டுகளாக உருவான உயிரினங்களை அழித்து அற்றுப்போகச் செய்திருக்கிறான். மனிதனின் வரவை எதிர்பாராத பறக்க இயலாத பறவைகள் பலவும் இதனால் அற்றுப்போயின (Extinct). மனிதனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுகள்  இல்லாத இந்த பறவைகள், ஆயுதம் ஏந்திய மனிதர்களிடம் எளிதில் மாட்டிக் கொண்டன. இவ்வாறு அற்றுப் போன பறவைகளில் முக்கியமானவை நியூசிலாந்து தீவுகளில் வாழ்ந்த Moa, மடகாஸ்கரில் வாழ்ந்த Elephant Bird, மொறீசியஸில் வாழ்ந்த Dodo ஆகியன. 

Dodo (Mauritius) - Taxidermy Display (London Natural History Museum)

Great Indian Bustard (India) - Taxidermy Display (London Natural History Museum)



பறக்க இயலாத இந்த பறவைகள் அந்தந்த தீவுகளில் ஓரிட வாழ்விகளாக (Endemic) வாழ்ந்து வந்தன. மனித குடியேறிய பிறகு அவனால் அறிமுகப்படுத்தப்பட்ட பூனை போன்ற மற்ற விலங்குகளும் தரையில் முட்டையிடும் இந்த பறவைகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தன. காட்டுயிர் பற்றி மனிதன் பேச தொடங்கிய பிறகும் பல பறவைகள் இன்றும் அழிவை நோக்கி சென்றுகொண்டே உள்ளன. தரையில் முட்டையிடும் கான மயிலை காக்க வேண்டுமெனில் நாம் "Dodo"-விடம் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். வேகமாக அருகிவரும் கான மயில்களை நம்மால் காப்பாற்ற முடியுமெனில், அது அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கை மட்டுமல்ல. நம் முன்னோர்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடமாகவும் இருக்கும். 

Post a Comment

1 Comments