நெஞ்சம் மறப்பதில்லை

கனடாவில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள் சமீபத்தில் அவருடைய இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். என்னுடைய பதிவை படிக்கும் முன்னர், அவருடைய கட்டுரையை படித்தால் நலம்.

http://amuttu.com/index.php?view=pages&id=316

எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு புறா, நேற்று முழுவதும், தன் அலகுகளால் என் இதயத்தை கீறிக் கொண்டே இருந்தது. இந்த கட்டுரையை படித்த பிறகு, என்னையும் அறியாமல், என் மனது புறா நடந்து வந்த பாதையை வட்டமடித்துக் கொண்டே இருந்தது.

எதற்காக அந்த புறா அவ்வளவு தூரம் நடந்தே வந்தது? தன்னை வளர்த்தவரின் மேல் இருந்த அன்புக்காகவா? தன் சிறகுகளை இழந்த பிறகும் நடந்து போக எப்படி முடிவு செய்தது? புதிய இடம் பிடிக்கவில்லை என்றால் அருகிலேயே வேறு எங்காவது வாழ்ந்துவிட்டு போயிருக்கலாமே? அவ்வளவு தூரம் நடந்து வரும் போது, அதன் சிந்தனை என்னவாக இருந்திருக்கும்? வரும் வழியில் ஏதேனும், உணவு எடுத்துக்கொண்டிருக்குமா? தன் கால்களில் ரத்தம் வருவதை கூட அது உணரவில்லையா? எப்படியும் இலக்கை அடைய நினைத்து விட வேண்டும் என்ற அந்த மன உறுதி எவ்வளவு அற்புதமானது? காலையில் கதவு திறக்கப்படும் வரை வாசலில் காத்துக்கொண்டு நின்றிருந்ததா? தன்னை வளர்த்தவருக்கு என்ன சொல்ல நினைத்தது?

எத்தனையோ கேள்விகள் மீண்டும் மீண்டும் துன்புறுத்துகின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

எத்தனையோ ஆயிரம் சித்திரவதைகளை செய்து ஜெர்மனியை ஆண்டு கொண்டிருந்த ஹிட்லரை காட்டிலும், அல்பிங்கா என்ற இந்த புறா ஆயிரம் மடங்கு மேலானது.

மன்னிக்கவும், அல்பிங்கா மேலானவர்.






Post a Comment

0 Comments