Mar 9, 2011

உள்ளங்கையின் ஒரு கடல் : திரு. பிரபஞ்சன்

நிகழ்காலத்துக் கதை கொண்ட நாவல்.

திரு.பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள் கொஞ்சமும் கடினம் இல்லாமல் இனிமையாக நகர்கிறது. பத்திரிக்கையில் புலனாய்வு செய்யும் ஒரு பெண் நிருபர், காணாமல் போன வெற்றிப்பட இயக்குனரை தேடிக் கண்டுபிடிக்கிறார்.

இயக்குனருக்கும் நடிகைக்கும் இடையேயான காதல், உதவி இயக்குனர்கள் படும் அல்லல்கள், சினிமாவில் இயங்கும் அலட்டல் பேர்வழிகள், மக்களின் மாறாத ரசனை என்று பல்வேறு இயல்பு நிலைகளையும் புகுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

உள்ளங்கையில் அள்ளினாலும் கடலின் குணம் மாறுவதில்லை. திரு. பிரபஞ்சன் என்ற கடலில், இந்த நாவலும் ஒரு உள்ளங்கை அளவே.

No comments:

Post a Comment