Jul 23, 2023

செம்பருந்து [Red backed Kite]

நன்னீர் பெருகிய 

ஆறுகள் இருந்தன.

அதன் கிளைகள் பலவால் 

ஏரிகள் நிரம்பின.

உயிர்க்கொல்லி மருந்துகள் 

இல்லா நிலத்தில்

பல்லுயிர்கள் யாவும் 

செழித்தே விளங்கின.

கழனிகள் யாவும் மருந்தால் நிரம்ப,

நீந்திய மீன்கள் செத்து மிதந்தன.

சுற்றுச்சூழல் மாசுபட்டதால் 

செம்பருந்தினமும் குறைந்தேபோயின.

Photo by Karthik Hari

2 comments: