May 29, 2021

புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை - முனைவர் திரு.ஜி.சிவக்குமார்

பழனியை சேர்ந்த திரு.சிவக்குமார் அவர்கள் எழுதிய இந்த கவிதை தொகுப்பை மிகவும் தாமதமாவே வாங்கினேன். வாசித்தேன். எப்போதோ வாசித்திருக்க வேண்டிய நூலை காலதாமதமாக வாங்கியது எவ்வளவு தவறு என்பதை வாசிக்கத் தொடங்கியதும் தெரிந்துகொண்டேன். 

திரு. சிவக்குமார் அவர்களின் இந்த கவிதை தொகுப்பு அவ்வளவு மென்மையானது. வாசிப்பதற்கு மிகவும் இலகுவானது. ஆனால் சிந்திக்கவைப்பது. நமக்குள் கேள்வி எழுப்பக்கூடிய கவிதைகளை அற்புதமாக எழுதிக் கொட்டியிருக்கிறார். 



கவிதைகள் வாசிப்பதென்பதே அற்புதமான அனுபவம் தான். அதுவும் கானுயிர் தொடர்புடைய கவிதைகள் என்றால் ஈர்க்கத்தானே செய்யும். இந்த நூலின் உள்ள கவிதைகளின் மையப்புள்ளி பழனியை சுற்றி இருப்பதால் கூடுதல் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. 

திருஆவினன்குடி யானை பற்றிய கவிதை அற்புதத்தின் உச்சம். பழனியை சேர்ந்தவராக இருந்தால் இந்த கவிதையை இன்னும் கூடுதலாக ரசிக்க முடியும். நூலின் ஆசிரியர் இயற்கை ஆர்வலர். அது அவருடைய பெரும்பாலான கவிதைகளில் இயல்பாகவே வெளிப்படுகிறது. பறவைகளின் தமிழ் பெயர்களை கவிதைகளில் கொண்டுவந்திருப்பது சிறப்பு. 

தற்போது நிறைய பறவையினங்களை அற்புதமாக படம் எடுக்கிறார். அவருடைய மற்றொரு நூலையும் வாசிக்க வேண்டும். "புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை" நூலின் அடுத்த பதிப்பு ஆசிய யானையின் அட்டைப்படத்தோடு விரைவில் வெளிவர வேண்டும். 

"புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை" கிடைக்குமிடம் : குமுதம் புத்தக நிலையம், பழனி பேருந்து நிலையம். 

2 comments:

  1. புத்தகம் குறித்த உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Would you like to follow ?